தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி அனுப்பிவைத்த மருந்துகள் என்ன என்பது யாருக்கும் புரியவில்லை என அரசு தரப்பில் குழம்பிக் கொண்டிருக்க பாரதி உடன் வேலை பார்க்க டாக்டர் வருவதை வரவழைத்து அது குறித்து கேட்க பாதி மருந்துகள் மட்டுமே ஆபரேஷன்க்கு தேவைப்படுவது எனவும் மற்ற பாதி செலரின் எனவும் தெரிய வருகிறது. பிறகு பாரதி தீவிரவாதிகளுக்கு எதிராக திட்டம் போட்டு இருப்பது தெரிகிறது.
அதனால் பாரதி கேட்டபடியே மருந்துகளை அரசு தரப்பு உள்ளே அனுப்பி வைக்கிறது. இந்த பக்கம் தீவிரவாதிகள் பாரதியை அழைத்து அமைச்சருக்கு நல்லபடியாக ஆபரேஷன் செய்து முடிக்க வேண்டும் அவருடைய உயிருக்கு ஆபத்து என்றால் முதலில் உன்னுடைய குடும்பத்தாரை தான் கொல்ல ஆரம்பிப்போம் அதுவும் குறிப்பாக உன்னுடைய பொண்ணு என சொல்லி அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
அதன் பிறகு பாரதி நான் யாருன்னு காட்டுறேன் என மேலே ஆப்பரேஷன் செய்ய கிளம்புகிறார். இந்த பக்கம் சௌந்தர்யா வேணு மற்றும் விக்ரம் என எல்லோரும் அரசு தரப்பில் விசாரிக்க வந்திருக்க அவர்களை உள்ளே அனுமதிக்காமல் பாரதி சிறிது நேரத்தில் ஆபரேஷனை தொடங்க போகிறார் என்ற தகவல் மட்டும் சொல்லுகின்றனர்.
மறுபக்கம் ரோஹித் வெண்பாவை இருவருக்கும் இடையே எல்லை மீறி நடந்த விஷயத்தை பற்றி சொல்லி வெறுப்பேத்துகிறார். இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi-kannamma serial episode-update

