தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் சௌந்தர்யா நிச்சயதார்த்தம் நடப்படியாக நடந்ததை நினைத்து குடும்பத்தாரிடம் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்க அப்போது வந்த கண்ணம்மா கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுக்க வேண்டியது வந்தேன் என வெண்பாவை வெறுப்பேற்றிய விஷயத்தை கூறுகிறார்.
அதன் பிறகு பாரதி வெண்பாவை சந்திக்க வந்து நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்ததற்காக வாழ்த்து கூறுகிறார். ஆனால் வெண்பா இப்ப வரைக்கும் நான் உனக்காகத்தான் காத்திட்டு இருக்கேன்னு உனக்கு புரியலையா? நீ எனக்கு எப்படி வாழ்த்து சொல்லலாம் என திரும்பவும் பழைய கதையை ஆரம்பிக்க கடுப்பாக பாரதி நீ கல்யாணம் பண்ணி பண்ணாம போ அதை பத்தி எனக்கு கவலை இல்லை. என்னை விடு எனக்கு 1008 பிரச்சனை இருக்கு நீ வேற எனக்கு பகையா நிக்காத என கூறிவிட்டு அங்கிருந்து வெளியே வந்து கொண்டிருக்கிறார்.
அதன் பின்னர் சாந்தி வெண்பாவை வீட்டுக்கு அழைக்க வெண்பா நான் தனியா இருக்கணும் நாளைக்கு வரேன் என சொல்லி சாந்தியை அனுப்பி வைத்து விட அதன் பிறகு ரோகித் சரக்கு பாட்டிலுடன் ரூமுக்கு வந்து வெண்பாவிடம் துண்டுவிட ஒரு கட்டத்தில் கடுப்பான வெண்பா சரக்கடிக்க ஆரம்பிக்க இருவருக்கும் யாரு நிறைய சரக்கு அடிக்கிறாங்கன்னு போட்டி ஏற்படுகிறது. இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update

