ஹேமாவால் வாய்தா வடிவுக்கரசியிடம் புலம்பிய கண்ணம்மா.. வெண்பாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கண்ணம்மா வாய்தா வடிவுகரசியிடம் ஹேமா ஸ்கூலில் நான்கு பேரும் ஒரே குடும்பமாக ஒரே வீட்டில் சந்தோஷமாக வாழ வேண்டும் என எழுதி இருந்ததையும் அதை பற்றி மிஸ் தன்னிடம் வந்து பேசியது குறித்தும் கூறுகிறார். நல்ல விஷயம் தானே என வாய்தா வடிவுகரசி சொல்ல இதுவே பாரதியிடம் போய் சொன்னால் ஹேமாவை என்னிடம் நெருங்க விடாமலும் லட்சுமியிடம் அவர் விலகிச் சென்று விடுவார் என கூறுகிறார். இமயமலை மாதிரி இருக்க இந்த பிரச்சனை முடிவுக்கு வராது என கண்ணம்மா வருத்தப்படுகிறார். நல்லதே நினை நல்லதே நடக்கும் இந்த பிரச்சனை பனி மலை போல உருகி விடும் என நினைத்துக் கொள் என கூறுகிறார்.

இந்த பக்கம் வீட்டில் எல்லோரும் அமர்ந்து கொண்டிருக்கும் போது ஹேமா ஓடிவந்து பாட்டி உங்களிடம் ஒன்னு சொல்லனும் என சொல்லி டூர் போயிருந்த இடத்தில் நான்கு பேரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோவை ஹாலில் புதிதாக பிரேம் போட்டு மாற்ற வேண்டும் என சொல்கிறார். போட்டோவை பார்த்து அனைவரும் சந்தோஷ படுகின்றனர். பிறகு சௌந்தர்யா ரொம்ப பெரிசா பிரேம் போட்டு மாட்டலாம் என சொல்கிறார்.

அதன் பின்னர் எல்லோரும் எழுந்து சென்று விட சௌந்தர்யாவுக்கு மீண்டும் மர்ம நபரிடம் இருந்து மெசேஜ் வர யாரென தெரியாமல் குழம்புகிறார். மீட் பண்ணலாமா என கேட்க கடுப்பான சௌந்தர்யா இன்னைக்கு உனக்கு இருக்குதா தரதரவென்று இழுத்துப் போய் போலீஸ் ஸ்டேஷன்ல விடுவேன் என நினைத்து மீட் பண்ணலாம் என சௌந்தர்யா கூறுகிறார்.

இந்த பக்கம் வெண்பாவுக்கும் மர்ம நபரிடமிருந்து தொடர்ந்து போன் வர அவரும் பதறுகிறார். இவ்வளவு நாளா இல்லாம இப்போ எதுக்கு போன் பண்றாங்க என அலறுகிறார். சாந்தி யார் யார் எனக்கேட்க எதுவும் சொல்லாமல் சாந்தியை திட்டி விட்டு போனை சுவிட்ச் ஆப் செய்து விடுகிறார்.

சௌந்தர்யா அவரைப் பார்ப்பதற்காக காபி ஷாப் செல்ல அங்கு போய் பார்த்தால் அவருடைய நண்பர் விக்ரம் இருக்கிறார். விக்ரமின் தன்னுடைய கணவர் வேணுவும் சேர்ந்துதான் பிராங்க் செய்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்கிறார். பிறகு விக்ரமிடம் நலம் விசாரிக்கிறார். இவ்வளவு நாள் எங்க இருந்த எப்ப வந்த எனக் கேட்க இவ்வளவு நாளாக அமெரிக்காவில் இருந்தேன், அங்கேயே செட்டில் ஆகிவிட்டேன். மத்தவங்களுக்காக வாழ்விலும் ஏதாவது செய்யணும்னு தோணுச்சு அதனாலதான் இந்தியா கிளம்பி வந்து விட்டேன் என கூறுகிறார்.

பொண்டாட்டி புள்ளைங்க எல்லாம் எப்படி இருக்காங்க என கேட்க தான் கல்யாணமே பண்ணிக்கல சிங்கிளாக இருக்கிறேன் என சொல்ல சௌந்தர்யா அதிர்ச்சி அடைகிறார். ஏனென கேட்க கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணல அதனால் பண்ணல அதனால பண்ணிக்கல என கூறுகிறார். பிறகு வீட்டுக்கு வருமாறு அழைக்கிறார். விக்ரமும் கண்டிப்பாக வருவேன் என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 05.04.22
jothika lakshu

Recent Posts

பார்வதி சொன்ன வார்த்தை, உச்சகட்ட கோபத்தில் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு சிங்கப்பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

7 hours ago

திரௌபதி 2 படம் குறித்து பேசிய மோகன் ஜி..வைரலாகும் தகவல்.!!

2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…

11 hours ago

எந்த காலத்திலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது.. நடிகை தேவயானி.!!

தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…

11 hours ago

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..!

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…

14 hours ago

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி – அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…

14 hours ago

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு?

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…

14 hours ago