பார்வதியை மிரட்டும் செல்வம்.. சந்தியா செய்த வேலை.. இன்றைய ராஜா ராணி 2 மற்றும் பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா. இவை இரண்டும் இணைந்து மெகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றைய எபிசோடில் சந்தியா சாமியார் செய்த ஒவ்வொரு குற்றத்தையும் கண்டுபிடித்து அதை அனைத்தையும் ஆதாரத்தோடு நிரூபிக்க ஊர் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மேலும் சிலையின் கண்ணீர் சிவப்பு நிறங்களுக்கு தடவி தான் கண்ணீர் வர வைக்கப்பட்டது என்பதை நிரூபிக்கிறார்.

இதனையடுத்து போலீஸ் சாமியாரை பிடிக்க சிவகாமி ஓடிச் சென்று சந்தியாவை கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்கிறார். அதன் பிறகு செல்வம் பார்வதியை துப்பாக்கி முனையில் வைத்து சாமியாரை விடுதலை செய்யுமாறு மிரட்டுகிறார். இப்படியான நிலையில் அர்ச்சனா சாதுரியமாக செயல்பட்டு செல்வத்தின் தலையில் கட்டையால் தாக்கி பார்வதியை மீட்கிறார். பிறகு போலீஸ் இதுவரையும் கைது செய்ய ஊர் மக்கள் அனைவரும் அர்ச்சனாவை பாராட்டுகின்றனர்.

பிறகு எல்லோரும் வீட்டுக்கு சென்ற பிறகு எல்லா பிரச்சனையும் ஒரேடியாக முடிந்து விட்டது என மயிலை வைத்து அனைவருக்கும் சுத்தி போடுகின்றனர். அதன் பின்னர் சிவகாமி எல்லாரும் முன்னாடியும் சந்தியாவிடம் மன்னிப்பு கேட்கிறார். சந்தியா செய்த ஒவ்வொரு விஷயத்தையும் சுட்டி காட்டி என்னை மன்னித்துவிடு நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் என கெஞ்சுகிறார். பிறகு சிவகாமியை சமாதானப்படுத்த முயற்சி செய்கின்றனர். அவசரப்பட்டு ஏற்றி வைத்திருந்த மூன்று விளக்கு ஒரு விளக்கை அணைத்து விட்டேன் என சிவகாமி நினைத்து அப்படியே நெஞ்சில் கை வைத்து மயங்கி விழுகிறார்.

பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ய அவருக்கு மைல்ட் ஹார்ட் அட்டாக் என தெரிய வருகிறது. அவருக்கு வருங்காலத்தில் பிரச்சனை ஏதும் ஏற்படாமல் இருக்க ஒரு சிறிய ஆபரேஷன் செய்ய வேண்டும் அதற்காக அவரை சென்னைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என பாரதி கூற அதற்கான ஏற்பாடுகளையும் நான் செய்கிறேன் என செய்கிறார்.

இந்த பக்கம் வெண்பா செய்தியில் கண்ணம்மா சாதனை குறித்து கேட்டு கடுப்பாக அவரை மேலும் வெறுப்பேத்துகிறார் ரோகித். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி மெகா சங்கமம் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma and raja rani 2 serial episode
jothika lakshu

Recent Posts

நந்தினிக்கு வரும் ஆபத்து.. பதறி தவிக்கும் சூர்யா.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

8 hours ago

எனக்கு கஷ்டம் வந்தால் நான் அழுவேன்.. நடிகை சாய் தன்ஷிகா பேச்சு.!

நான் அனுபவிக்காத கஷ்டமே இல்லை என்று நடிகை சாய் தன்ஷிகா பேசியுள்ளார். மனதோடு மழைக்காலம் படத்தின் மூலம் கதாநாயகியின் தோழியாக…

8 hours ago

குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்?என்ற கேள்விக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் சொன்ன பதில்.!!

சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சால் திரையரங்கத்தை அதிர விட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார்…

17 hours ago

சினிமாவில் இருந்து விலகப் போகிறார் அஜித்? ரசிகர்கள் மனதில் எழுந்த கேள்வி.!

டிரைவராகவே தொடர விரும்புவதாக அஜித் கூறியதால் ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…

17 hours ago

‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி

‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…

1 day ago

அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்‌ஷன் அவதாரம்

அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்‌ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…

1 day ago