Tamilstar
Health

சரும பொலிவிற்கு உதவும் செம்பருத்தி..!

சருமத்தை பொலிவாக வைத்துக்கொள்ள செம்பருத்தி பூ உதவுகிறது.

பொதுவாகவே செம்பருத்தி பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது என அனைவருக்கும் தெரியும். அப்படி சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ளவும் தலைமுடி பிரச்சனை போன்ற சில பிரச்சனைகளை சரி செய்ய நம் செம்பருத்தி பூவை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

முடி வளர்ச்சிக்கும் பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபடவும் செம்பருத்தி பூ மிகவும் பயன்படுகிறது. செம்பருத்தி பூவின் சாறு இருக்கும் அளவிற்கு எண்ணெய் சேர்த்து காய்ச்சி தலையில் தடவி வர வேண்டும் அப்படி தொடர்ந்து தடவி வரும்போது தலைமுடி உதிர்வு இருக்காது.

இது மட்டும் இல்லாமல் செம்பருத்தி பூவை பொடி செய்து அதனை தேநீரில் கலந்து குடித்து வந்தால் ரத்தசோகை பிரச்சனை வராமல் தடுக்க முடியும்.

எனவே உடலுக்கும் முடிக்கும் சேர்த்து ஆரோக்கியத்தை தரும் செம்பருத்தி பூவில் இருக்கும் நன்மைகளை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.