ஊற வைத்த அத்தி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக ஊறவைத்த அத்திப்பழத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கியமும், நிறைந்திருக்கிறது. அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட்டு செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபட உதவுகிறது.
மேலும் உடல் எடையை குறைக்கவும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவும்.எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த ஊறவைத்த அத்திப்பழத்தை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.