எழில் சொன்ன வார்த்தை,அதிர்ச்சியில் ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

அமிர்தாவை அவமானப்படுத்தி பேசி உள்ளார் ஈஸ்வரி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி மற்றும் எழில் கோபமாக பேசிக் கொள்கின்றன.வீட்டில் இருக்கும் அனைவரும் சமாதானம் செய்ய இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றன. கணேஷ் திரும்பி வந்து என் பொண்டாட்டியும் ,குழந்தையும் அனுப்பி வைனு சொன்னா அனுப்பி வச்சுருவியா, இந்த வீட்டுக்குன்னு நீ என்ன பண்ணி இருக்க, வேலைக்கும் போக மாட்டே, குழந்தையும் பெத்துக்க மாட்டே என்றால் என்ன வாழ்க்கை நீ வாழர என்று கேட்டு கோபப்படுகிறார்.எழிலுக்கு ஆதரவாக பேசுகிறார் பாக்யா.

பிறகு எழிலை சமாதானம் செய்து கூட்டிக்கொண்டு போக ஈஸ்வரி அப்போ எனக்கு மரியாதை அவ்வளவு தானா? என்று கேட்கிறார். ராமமூர்த்தி எழிலுக்கு நேரம் சரியில்லை சரியானதும் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்ல, ஈஸ்வரி நேரம் இவளுக்கு தான் சரி இல்லை என்று அமிர்தாவை சொல்லுகிறார், மேலும் அமிர்தாவை ராசி இல்லாதவள் என்று பேசி அவமானப்படுத்துகிறார். அமிர்தாவின் வாழ்க்கையில் எதுவுமே உருப்படியாக நடக்கல என்று பேசுகிறார் ஈஸ்வரி.

குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஈஸ்வரியை தடுத்து நிறுத்த முயற்சி செய்ய ஈஸ்வரி இன்னும் கோபமாக எழிலோட வாழ்க்கை நல்லா இல்லாததற்கு காரணம் அமிர்தா தான் என்று சொல்கிறார்.

அமிர்தாவை பற்றி தப்பா பேசாதீங்க என்று எழில் கோபப்பட, இன்னொரு வார்த்தை ஏதாவது அமிர்தாவ பத்தி பேசினா ஏதாவது சொல்லி விடுவேன் என்று ஈஸ்வரியிடம் கோபமாக பேசுகிறார். பிறகு நான் படம் பண்ணாததற்கு காரணம் அமிர்தா கிடையாது நீங்கள், நீங்கள் மட்டும்தான் என்று சொல்லி ஈஸ்வரிக்கு அதிர்ச்சியை கொடுக்கிறார்.

நான் என்ன காரணம் என்று கேட்க ஆமாம் நீங்கள் தான் காரணம், நான் கதையை சொல்லி படம் எடுக்கும் நேரத்தில் உங்களைத் தேடி போலீஸ் வீட்டுக்கு வந்தது தான் காரணம். நீங்க கொஞ்ச நேரம் யோசித்து உங்க பிள்ளை கூட போகாம இருந்திருந்தால் நானும் படம் எடுத்திருப்பேன். நீங்கள் சொன்னதெல்லாம் நடந்து இருக்கும் என்று கோபப்பட்டு பேசினார். ஈஸ்வரி இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சியாகி நிற்கிறார்.

இதையெல்லாம் கேட்ட ஈஸ்வரி கடைசியில் பழியை தூக்கி என் மீது போட்டுட்டியா என்று கேட்க நான் யார் மீதும் பழி போடல நடந்தது தான் சொல்கிறேன் என்று சொல்கிறார்.நீங்கள் சொன்ன விஷயம் தப்பு கிடையாது, அதை சொல்லும் விதம் தான் தப்பு என்று ஈஸ்வரியிடம் சொல்கிறார்.

அமிர்தா நான் இந்த வீட்டை விட்டு நிலாவை கூட்டிக் கொண்டு போய் விடுகிறேன் என்று சொல்ல ஜெனி நீ ஏன் போக வேண்டும் என்று கேட்கிறார் என்னால் தான் எல்லா பிரச்சனையும் என்று அமிர்தா சொல்ல ஈஸ்வரி நாடகம் போடுறீங்களா என்று கேட்கிறார்.

வீட்டை விட்டு போக சொல்லும் ஈஸ்வரி? எழில் எடுக்கப் போக முடிவு என்ன? பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


baakiyalkshimi serial episode update
jothika lakshu

Recent Posts

குஷ்புவின் மகள்கள் மீதான உருவக்கேலிக்கு ராதிகா கடும் கண்டனம்

சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…

2 days ago

“தாய்லாந்தில் ஜெயராமுடன் பிச்சை எடுத்து ரூ.100 சம்பாதித்தோம்!” – நடிகை பாவனா பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம்

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…

2 days ago

‘கட்டா குஸ்தி 2’ பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்… விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…

2 days ago

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’… செப்டம்பரில் ரிலீஸ்?

இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…

2 days ago

விம்பிள்டன் 2026: இந்திய பிரபலங்களின் ஸ்டைலான ஃபேஷன் அணிவகுப்பு!

உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…

2 days ago

Boomer Man Official Trailer

Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…

3 days ago