தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா பாண்டிச்சேரிக்கு சமைக்க சென்றுள்ள நிலையில் நடக்கும் கல்யாணத்திற்கு கோபியும் வந்துள்ளார்.
இந்த கல்யாணத்திற்கு பாக்யா வந்துள்ளார் என்பது கோபிக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் நிலையில் இன்னும் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளாமல் இருக்கின்றனர்.
இப்படியான நிலையில் இந்த சீரியலை அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் பாக்கியா கோபி உட்பட மேலும் சிலர் உட்கார்ந்து சாப்பிடும் டேபிளுக்கு சென்று நம்ம மெனுவில் பால் பாயாசமும் இருக்கு என்று சொல்ல கோபி ஆமா பெரிய பால் பாயாசம் என கடுப்பாகிறார்.
பிறகு அவர் நேராக பழனிச்சாமியிடம் சென்று நீங்க ரெண்டு பேரும் பிளான் பண்ணி தான் இங்க வந்து இருக்கீங்க என சத்தம் போடுகிறார். சுதாகர் செல்வியிடம் யார் இவர் என்று கேட்க இவர்தான் பாக்கியா அக்காவோட ஹஸ்பெண்ட் என்ற விஷயத்தை சொல்ல கொஞ்ச நேரத்தில் சுதாகரின் மனைவி இவங்கதான் ராதிகாவோட ஹஸ்பண்ட் என கோபியை அறிமுகம் செய்து வைக்க அவர் எப்படிடா என அதிர்ச்சி அடைகிறார்.
இதனால் பாக்கியலட்சுமி சீரியலில் வரும் நாட்களில் fun ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


