தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது இனியா நித்திஷ் போதை பொருளுக்கு அடிமையானவர் என தெரிய வர கோபியிடம் விஷயத்தை சொல்லுகிறார் பிறகு கோபி சுதாகரிடம் வந்து பேச சுதாகர் நாங்க பார்த்துக்கிறோம் என்று உறுதி கொடுக்கிறார்.
பாக்யா நிதிஷை போதை வழக்கில் கைது செய்வதை பார்த்து விட வீட்டில் வந்து நடந்த விஷயங்கள் பற்றி பேச குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். இனியா குடும்பத்தினரிடம் அங்கிளுக்கு அம்மாவோட ரெஸ்டாரன்ட் வாங்கணும் அதுக்காக தான் இந்த கல்யாணத்தை பண்ணி இருக்காரு என்று சொல்லுகிறார். இனியாவை கட்டிப்பிடித்து பாக்யா அழ உடனே ரெஸ்டாரன்ட் விஷயத்தில் அமைதியாக இருந்த மாதிரி என் பொண்ணு விஷயத்துலயும் அமைதியா இருக்க மாட்டேன் என பாக்யா கோபமாக சொல்லிவிட்டு வெளியில் வர பாக்யாவும் கோபியும் சுதாகர் வீட்டுக்கு வருகின்றனர்.
சுதாகரிடம் நீங்க மிகப்பெரிய தப்பு பண்ணிட்டீங்க நான் ரெஸ்டாரன்ட் விஷயத்தில் இருந்த மாதிரி அமைதியா இருக்க மாட்ட நீங்க பண்ண தப்புக்கு கண்டிப்பா பல நான் அனுபவிச்சு ஆகணும் என்று சவால் விட்டுவிட்டு வருகிறார்.
பரபரப்பான திருப்பங்களுடன் என்ன நடக்கப் போகிறது என்று இனிவரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.
