தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது கோபி ஜெயிலில் இருக்க பாக்யாவும் குடும்பத்தினரும் சுதாகர் தான் நித்திசை கொலை செய்த விஷயத்தை ஆதாரத்துடன் போலீஸ் ஸ்டேஷனில் நிரூபிக்கின்றனர். பிறகு என்ன நடக்கப்போகிறது என்று பரபரப்பான கதைகளுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது இந்த வாரத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதால் தற்போது இறுதிவரை ப்ரோமோ வெளியாகி உள்ளது அதாவது சுதாகர் தான் நிதிஷ கொலை செய்த உண்மையை கண்டுபிடிக்க கோபியை ரிலீஸ் செய்து விடுகின்றனர். ஆகாஷும் கலெக்டர் ஆகிவிட செல்வி என் பையன் ஆகாஷ் கலெக்டருக்கு உங்க இனியா பாப்பாவை கட்டிக் கொடுப்பீங்களா என்று கேட்க குடும்பத்தினரும் சந்தோஷமாக சம்மதிக்கின்றனர்.
பிறகு கோலாகலமாக திருமணம் நடைபெறுகிறது பிறகு ஈஸ்வரி எல்லாரும் அவங்க அவங்க குடும்பத்தை பார்த்துக்கிட்டு போயிட்டாங்க நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ போறீங்களா? இல்லையா?என்று கேட்க பாக்யா என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்பதை இனிவரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.

