கணேஷ் கொடுத்த ஷாக். கோபத்தில் ஈஸ்வரி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் கோபி மற்றும் ஈஸ்வரி வக்கீலை பார்த்து பேசி விட்டு வரும்போது எதிரே ஜோசப் வர ஈஸ்வரி அவரிடம் சண்டை போட்டு வாக்குவாதம் செய்கிறார். செழியன் கண்டிப்பா விவாகரத்து கொடுக்க மாட்டான் அப்படியே விவாகரத்து கொடுத்தாலும் குழந்தை எங்க கிட்ட தான் இருக்கும் என்று சவால் விட்டுவிட்டு வருகிறார்.

அதனைத் தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் கணேஷ் போலீச கூட்டிட்டு நேரா வீட்டுக்கு போக வேண்டியதுதான் என்று முடிவெடுத்து நிற்க வெளியே வரும் கான்ஸ்டபிள் ஒருவர் என்ன விஷயம் என்று கேட்க என் பொண்டாட்டியும் பிள்ளையையும் கடத்தி வச்சிருக்காங்க என்று கூறுகிறார். பிறகு இன்ஸ்பெக்டர் இடம் சென்று நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்ல அவர் கான்ஸ்டபிள் ஒருவரை அனுப்பி வைக்கிறார்.

கணேஷ் இவரையா அனுப்புறிங்க என்று கேட்க அவர் ரொம்ப அனுபவசாலி நிறைய கேஸ் பார்த்து இருக்காரு அவரு இதை தீர்த்து வைத்து விடுவாரு என்று சொல்லி அனுப்ப கணேஷ் திரும்பத் திரும்ப தன்னுடைய கதையை பற்றி சொல்ல அந்த கான்ஸ்டபிள் கடுப்பாகிறார்.

ஒரு காபி குடிச்சிட்டு போலாமா என்று கேட்க சார் முதல்ல என் அமிர்தாவையும் குழந்தையும் என்கிட்ட மீட்டு கொடுத்துடுங்க நான் உங்களுக்கு விருந்து வைக்கிறேன் என்று சொல்கிறார். இங்கே வீட்டில் கோர்ட்டில் நடந்த விஷயம் பற்றி எழில், ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் பேசிக் கொண்டிருக்க கணேஷ் வந்து நிற்க அதிர்ச்சி அடைகின்றனர்.

உன்ன தான் இங்க வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கோம்ல வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்கின்றனர். ஈஸ்வரி எழிலிடம் நீ போலீசுக்கு போனை போடு என்று சொல்ல கணேஷ் நானே போலீஸோட தான் வந்திருக்கேன் சார் வாங்க என்று கூப்பிட்ட கான்ஸ்டபிள் வந்து நிற்க இவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.

வண்டியில வந்தது இடுப்பெல்லாம் வலிக்குது, குண்டும் குழியுமான ரோட்டில் ஓட்டிட்டு வந்தான் உக்காந்து பேசலாமா என்று சொல்லி கான்ஸ்டபிள் வந்து உட்காருகிறார். பாக்யா சார் காபி குடிக்கிறீங்களா என்று கேட்க குடிச்சா நல்லா தான் இருக்கும் என்று கான்ஸ்டபிள் சொல்ல செல்வி காபி போட்டு கொண்டு வந்து கொடுக்கிறார். காபி வாசனையே செமையா இருக்கு இந்த மாதிரி வாசனையை பார்த்ததே இல்லை. காபி பவுடர் எங்கே வாங்குறீங்க என்று கேட்க பாக்யா நாங்க வீட்டிலேயே அறைப்போம் என்று சொல்ல செல்வி நாங்க கேட்டரிங் நடத்துகிறோம் என கூறுகிறார்.

அதனைத் தொடர்ந்து கணேஷ் சார் என் விஷயத்தை விசாரிங்க என்று சொல்ல உங்களுக்கும் அமிர்தாவுக்கும் எப்படி கல்யாணம் நடந்துச்சு நீங்க அவங்களை எப்படி பார்த்தீங்க என்று கேட்க எழில் நடந்தவற்றை சொல்கிறார். பிறகு ராமமூர்த்தி இரண்டு பேரும் வீட்டிற்கு தெரிந்துதான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க திடீர்னு இவன் வந்து அமிர்தா வேணும் குழந்தை வேணும்னு கேட்டா எப்படி அது சாத்தியம் என்று கேட்கிறார்.

அதன் பிறகு கான்ஸ்டபிள் அமிர்தாவை கூப்பிட்டு எனக்கு நடந்த விஷயம் எல்லாம் தெரியும் அது பத்தி நான் பேச வேண்டாம் நீ கணேஷ் கூட போக விருப்பப்படறியா இல்லையா அது மட்டும் சொல்லு என்று கேட்க அமிர்தா என்ன சொல்ல போகிறார் என்ற பில்டப் உடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode-update
jothika lakshu

Recent Posts

ஆலியா பட் மெய்க்காப்பாளர் செயலால் கொந்தளித்த நெட்டிசன்கள்!

நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…

3 hours ago

பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது – நடிகர் ஜிதின் குலாட்டி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…

3 hours ago

மயோசிடிஸ் நோயால் என் அடையாளத்தையே இழந்துவிட்டதாக உணர்ந்தேன் – நடிகை சமந்தா

நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…

4 hours ago

தீபிகா படுகோனேவின் கர்ப்பகால போட்டோஷூட் வைரல்!

நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…

4 hours ago

அஜித்துடனான பயணம் தான் என்னை உயர்த்தியது – எடிட்டர் விஜய் வேலுக்குட்டி

தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…

4 hours ago

Meesaya Murukku 2 Official Trailer

Meesaya Murukku 2 Official Trailer | Hiphop Tamizha | Khushbu Sundar | ACS Arun Kumar

21 hours ago