Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மயங்கி விழுந்த அமிர்தா. அதிர்ச்சியில் எழில். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அமெரிக்கா நிலாவுக்காக வேண்டுதலை நிறைவேற்ற என்ன செய்ய வேண்டும் என கேட்டு வர கோவிலுக்கு சென்று நிலையில் கணேஷ் எதிரே வந்து நின்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

அமிர்தா பயத்தில் பதறி போய் ஓடி வந்து எழில் என்று எதுவும் சொல்ல முடியாமல் மயங்கி விட எழில் என்னாச்சு என்று கேட்டுக் கொண்டிருக்க கணேஷ் என் கையை பிடித்து அவ என்ன பார்த்து சந்தோஷத்துல மயங்கிட்டா என்று தன் பக்கம் இழுத்து கொள்ள எழில் அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்.

அதேபோல் வீட்டில் விஷயம் அறிந்து என்ன செய்வது என்று தெரியாமல் அதைச் செய்து இருக்க ஈஸ்வரி எல்லாத்துக்கும் காரணம் பாக்கியா தான், எழிலுக்கு அமைந்த நல்ல வாழ்க்கையை பாக்கியா தான் கெடுத்து விட்டார் என பழி போடுகிறார்.

இங்கே அமிர்தா கணேசின் அம்மா அப்பாவிடம் சென்று இங்கு என்ன நடக்குது என்று கேட்க எழில் கணேசன் அம்மாவின் கையை பிடித்து இதெல்லாம் கனவா நெஜமா என்று கேட்க கணேஷ் எங்கம்மா கை பிடிக்க நீ யாரு அமிர்தாவையும் பாப்பாவையும் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் என்று சொல்ல அமிர்தா எழில் பின்னாடி ஓடிப் போய் மீண்டும் சொல்கிறார். நிலா பாப்பாவையும் எழில் வைத்துக் கொண்டிருக்க கணேஷ் குழந்தையை வாங்க போக அமிர்தா இது என் குழந்தை தர மாட்டேன் என வாங்கி கொள்கிறார்.

பிறகு கணேசின் அம்மா அப்பா நாம பொறுமையா பேசிக்கலாம் என்று கணேசை கூட்டிச் செல்ல இங்கே ஈஸ்வரி இந்த விஷயம் எழில் அமிர்தாவுக்கு தெரிய வேண்டாம் என்று சொல்ல ராதிகா அப்படி மறைக்க முடியாது என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode-update
baakiyalakshmi serial episode-update