baakiyalakshmi serial episode update 28-11-23
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் கோபி ஈஸ்வரி இடம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பழனிச்சாமி வர வைத்து இருவரும் நெருக்கமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்ததாக சொல்ல எழில் எங்க அம்மாவ பத்தி என்ன சொன்னீங்க என்று சண்டைக்கு போக பாக்கியா என்ன கேள்வி கேட்க இவர் யாரு இவருக்கு என்ன உரிமை இருக்கு என பதிலடி கொடுக்கிறார்.
உடனே ஈஸ்வரி அவன் கேள்வி கேட்கக் கூடாது நான் கேள்வி கேட்கலாம்ல என்று சொல்லி அந்த பழனிச்சாமியால் தான் எல்லா பிரச்சனையும் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். அவன் எதுக்கு யாரும் இல்லாத நேரத்துல வீட்டுக்கு வரணும்? அக்கம் பக்கத்தில் பார்த்தால் என்ன சொல்லுவாங்க அதெல்லாம் யோசிச்சு தான் கோபி கேள்வி கேட்டிருக்கான் அதுல என்ன தப்பு இருக்கு என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஈஸ்வரி கேட்கும் கேள்விகளை கேட்டு கோபி மனம் குளிர்கிறார்.
அதனைத் தொடர்ந்து பாக்கியா அக்கம் பக்கத்துல இருக்க எல்லாருக்கும் என்ன பத்தி தெரியும் இவருக்கு மட்டும் தான் என்ன பத்தி இப்படி பேசிகிட்டு இருப்பார் என்று சொல்கிறார். திரும்பவும் நான் அப்படித்தான் கேட்பேன் என கோபி பாக்யாவை அவமானப்படுத்த எழில் அடிக்கப்பட்ட செழியன் தடுத்து நிறுத்தி என்ட்ரி கொடுக்கிறார்.
நீங்க சொல்ற மாதிரி இங்க எதுவுமே இல்ல அப்ப நான் வீட்லதான் இருந்தேன். முதல்ல நானும் பழனிச்சாமி சாறும் தான் பேசினோம் அவர் வந்ததுமே சொல்லாம வந்ததுக்கு சாரி கேட்டுட்டு தான் பேச தொடங்கினார். ஆபீஸ் கால் வரவே நான் மேல் விழுந்து போயிட்டேன்.
இவர் பேசுனது எல்லாத்தையும் நான் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன் காது கொடுத்து கேட்க முடியல எங்க அம்மாவை அவ்வளவு அவமானப்படுத்தி பேசினார். பழனிச்சாமியை அவமானப்படுத்தி வெளிய அனுப்பினார். பாவம் அந்த மனுஷன் தல குனிஞ்சு போனாரு என்று சொல்ல ஈஸ்வரி உனக்கு அது தான் கவலையா என்று கேட்க இவர் பேசின வார்த்தைகள் அப்படி என்ன செழியன் பதிலடி கொடுக்கிறார்.
இவ நினைச்சிருந்தா உன்னையும் ஜெனியையும் எப்பயோ சேர்த்து வச்சு இருக்கலாம். அவ அத பண்ணல ஆனா நீ அவளுக்கு சப்போர்ட் பண்ணி உங்க அப்பாவை எதிர்த்து பேசிக்கிட்டு இருக்க என்று சொல்ல அது நான் பண்ண தப்பு முழுக்க முழுக்க தப்பு என் பேர்ல இருக்கு அதுக்கான தண்டனையை நான் அனுபவிச்சிட்டு இருக்கேன் என்று சொல்கிறார். அதோடு அதுக்கும் இந்த பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம் என கேள்வி கேட்டு ஈஸ்வரியை ஆஃப் ஆக்குகிறார்.
முதல்ல நீங்க பேசுனதை அம்மா பாதி கூட சொல்லல, முழுசா சொல்லி இருந்தா அவ்வளவு தான் என்று சொல்ல எழில் என்ன பேசினார் என்று கேட்க செழியன் அதெல்லாம் சொல்ல முடியல வாய் கூசுது என சொல்லி விடுகிறார். கோபி செழியா நீயும் உன் அம்மாவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவியா என்று கேட்க கண்டிப்பா என பதிலடி கொடுக்கிறார்.
நீங்க பேசுனத பார்த்திருந்தா யாரா இருந்தாலும் அம்மாவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க என சொல்கிறார். இந்த நேரம் ராதிகாவும் இனியாவும் வீட்டிற்கு வர கோபி ராதிகா நல்ல நேரத்தில் வந்த நீயே வா வந்து நியாயத்தை கேளு என கூப்பிடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…
ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…