baakiyalakshmi serial episode update 28-01-25
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா ஈஸ்வரியை ரைடுக்கு கூப்பிட ஈஸ்வரி வேண்டாம் என சொல்லுகிறார் உடனே செல்வி அவங்க வரமாட்டாங்க இனியா பாப்பா அவங்களுக்கு பயம் என்று சொல்லி ஈஸ்வரியை உசுப்பேத்தி கேம் இல் விளையாட வைக்கிறார். அனைவரும் சந்தோஷமாக கேம் விளையாட ராதிகா பாக்யா மட்டும் எந்த ஒரு ரைட்டிலும் பங்கு கொள்ளாமல் இருக்கின்றனர். அந்த கேம் முடித்து வேறு ஒரு கேம் குடும்பத்துடன் சேர்ந்து விளையாடுகின்றனர்.
பிறகு அனைவரும் சாப்பிட உட்கார செல்வி நம்ம ரெஸ்டாரண்ட்ல எல்லாமே கம்மி வில எவ்வளவு அதிகமா இருக்கு என்று சொல்ல பாக்கியா எடுத்துக்கேத்த மாதிரி எல்லா விலையும் இருக்கும் என்று சொல்லுகிறார் உடனே ஈஸ்வரி இதுல எனக்கு எதுவுமே புரியல என்று சொல்ல கோபி நான் ஆர்டர் பண்றேன் என்று சொல்லுகிறார் உடனே ராதிகா நானே எல்லாருக்கும் ஆர்டர் பண்றேன் என்று சொல்ல, எங்களுக்கெல்லாம் என்ன பிடிக்கும்னு தெரியுமா ஆர்டர் பண்ணி அப்புறம் எல்லாம் வேஸ்ட் ஆகவா என்று சொல்ல ராதிகா எல்லோருக்கும் சேர்த்து ஆர்டர் செய்கிறார் ராதிகா ஆர்டர் செய்தது எல்லோருக்கும் பிடித்ததால் அனைவரும் நன்றாக சாப்பிடுகின்றனர் ஆனால் ராதிகா எதையோ யோசித்துக் கொண்டு அனைவரும் சாப்பிடுவதையும் ரசித்துப் பார்க்கிறார் பாக்யா இதை கவனித்து என்னவென்று சைகையில் கேட்க ஒன்றும் இல்லை என்று சொல்லிவிடுகிறார். அனைவரும் சாப்பிட்டுவிட்டு வெளியில் வர அங்கு ரிங் தூக்கி போட்டு பொம்மை ஜெயிக்கும் போட்டி இருப்பதால் இனியா லவ் பேர்ட்ஸ் வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் அனைவரும் தூக்கிப் போட எழிலுக்கு ஒரு பொம்மை கிடைக்கிறது ஆனால் அதை இனியாவுடன் கொடுக்க எனக்கு அந்த லவ் பேர்ட்ஸ் தான் வேணும் இது வேண்டாம் என்று சொல்ல உனக்கு வேணாம்னா போனா மயூகிட்ட கொடுக்கிறேன் என்று சொல்லி மயூவிடம் கொடுக்க மயூ வாங்கிக் கொள்கிறார்.
சரி நானே போடுகிறேன் என்று இனியா தூக்கி போட ரிங்கு கீழே விழுகிறது இதனால் அப்செட் ஆன இனியா எனக்கு அந்த பொம்மை இல்லையா என்று கேட்க ராதிகா நா போட்டு தரேன் என்று சொல்லி கரெக்டாக அந்த பொம்மையின் மீது போட்டு இனியாவிற்கு வாங்கி கொடுக்கிறார் இதனால் இனியா சந்தோஷப்பட்டு சிரிக்கிறார். பாக்கியாவை விளையாட சொல்ல பாக்யா அடுத்த பலூன் கேம் இருக்கிறது நான் அது விளையாடுகிறேன் என்று அங்கு வருகின்றனர் பாக்யா மற்றும் மற்றவர்கள் சொல்லும் கலர் பலூனை கரெக்ட்டாக சூட அதனைப் பார்த்து கோபி இவ்வளவு திறமை பாக்யாவுக்கு எங்கம்மா வந்துச்சு என்று கேட்க அவ செவ்வாய் கிரகத்துக்கு போக சொன்னா கூட வண்டியிலேயே போயிட்டு வந்துருவா என்று பேசிக்கொண்டு இருக்கின்றனர். கொஞ்ச நேரம் கழித்து ஈஸ்வரி கோபியுடன் நடந்து வர குடும்பத்தினருடன் பாக்கியா வர திடீர்னு எதுக்குமா இந்த பிளான் என்று கேட்க இது முழுக்க ராதிகாவுடைய ஏற்பாடு இனியா அப்செட்டா இருக்கான்னு அவங்க இப்படி பண்ணியிருக்காங்க ஆனா இதுதான் உண்மையான காரணமா இருக்குமானு எனக்கு தெரியல இதுக்கு பின்னாடி ஏதோ ஒரு பெரிய விஷயம் இருக்கு என்று யோசிக்கிறார் அவங்க ஏதோ பெரிய முடிவு ஒன்னு எடுத்து இருக்காங்க அதனால தான் என்று சொல்லுகிறார். ராதிகா மயூ மற்றும் இனியாவுடன் வர இனியாவை பார்த்து நல்லபடி நீயா டான்ஸ் விற்றாத அங்கு நடந்ததுக்கு சாரி என்று சொல்ல பரவால்ல விடுங்க என்று சொல்லுகிறார்.
அனைவரும் ஓரிடத்தில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருக்க செல்வி இனியாவிடம் ஒரு டான்ஸ் ஆடு பாப்பா என்று சொல்ல இந்த இடத்தில் எப்படி ஆட முடியும் என்று சொல்ல ஈஸ்வரி அவ்ளோ பேரும் முன்னாடி ஆடுற இங்க ஆட கூடாதா என்று கேட்க சரியென சொல்லுகிறார் உடனே கோபி மயூ நீயும் போய் அக்கா கூட டான்ஸ் ஆடு என்று சொல்ல இனிய அக்கா பெரிய டான்சர் அவங்க கூட எல்லாம் என்னால ஆட முடியாது என்று சொல்ல இனியா வா மயு ஆடலாம் என்று கூப்பிட இரண்டு பேரும் டான்ஸ் ஆட அனைவரும் கைத்தட்டி விசில் அடித்து சந்தோஷப்படுகின்றன.
பிறகு அனைவரும் நின்று கொண்டிருக்க இனிய வாங்க பீச்சில் விளையாடலாம் என்று கூப்பிட விளையாட செல்கின்றனர். ஆனால் ராதிகா நடந்ததை எல்லாம் நினைத்துக் கொண்டு அமைதியாக நின்று விட்டு அவர்கள் பீச்சில் விளையாடுவதை வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார் இதனை கவனித்த பாக்கியா என்னாச்சு நீங்க ஏன் ஒரு மாதிரியாக இருக்கீங்க நீங்க சந்தோஷமா இருக்கீங்களா என்று கேட்க நான் இதுவரைக்கும் இருக்க சந்தோஷத்தை விட இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என்று சொல்லுகிறார்.
பிறகு அனைவரும் வீட்டுக்கு வர ஈஸ்வரி என்ன சொல்லுகிறார்?அதற்கு கோபியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…