ராதிகா வீட்டில் தங்கிய கோபி.. வருத்தத்தில் குடும்பத்தினர்.. இன்றைய பாக்யலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கோபி வீட்டுக்கு கிளம்புகிறேன் என்று சொல்ல ராதிகாவும் மய்யூம் அவரை போக விடாமல் தடுத்து விடுகின்றனர். இந்தப் பக்கம் செல்வி வீட்டுக்கு கூட போகாமல் பாக்கியா ஸ்டேஷனில் இருப்பதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். மீந்துபோன சாப்பாடு எடுத்துட்டு போயிட்டு எதையாவது பண்ணுகிறேன் என செல்வி கிளம்புகிறார். அது எல்லாம் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக் கொட்டி இழுத்துக்கொண்டு நாய்க்கு கொட்டுவதற்கு கிளம்ப போன்ற நிலையில் எழில் வந்து விடுகிறார். அது என்ன ஏது என கேட்பது போல பழைய சாப்பாடு இதைத்தான் அவர்களுக்கு கொடுத்தோம். நாய்க்கு கொட்ட எடுத்துட்டு போறேன் என சொல்ல வேண்டாம் இத சாப்பிடுங்க குழந்தைகளுக்கு பிரச்சனை என எழில் சொல்கிறார்.

அட நீங்க வேற தம்பி இதை தானே நாங்க எல்லாரும் சாபிட்டோம் என செல்வி சொல்ல அதிர்ச்சி அடைந்து அந்த சாப்பாட்டை எடுத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார். போலீஸ் ஸ்டேஷன் சென்று இந்த சாப்பாடு வீட்ல இருக்க எல்லோரும் சாப்பிட்டாங்க யாருக்கும் எதுவும் ஆகல நான் இன்னும் சாப்பிடவே பாருங்க என சாப்பிடுகிறார். டெஸ்டுக்கு அனுப்பினால் உண்மை தெரிந்துவிடும் என சொல்ல அதை நாம் அனுப்பியாச்சு ரிசல்ட் வரல என்று சொல்கிறார். எதுவாக இருந்தாலும் கோர்ட்ல பார்த்துக்கோங்க என்று சொல்லிவிடுகிறார்.

இந்த பக்கம் கோபி இனியாவுக்கு போன் போட இனிய ஈஸ்வரி என எல்லோரும் கண்ணீர் விட்டு பதற்றத்தோடு பேசுகின்றனர். நான் ஒரு மீட்டிங்குக்கு வெளியே வந்து இருக்கேன் என்னால போன் எடுக்க முடியலை என பொய் சொல்கிறார் கோபி. இப்ப கூட போன்ல தான் பேசுவியா வீட்டுக்கு வர மாட்டியா என ஈஸ்வரி கேட்க உடனே கிளம்புகிறேன் என சொல்லி போனை வைக்கிறார். பிறகு வீட்டுக்கு கிளம்புகிறேன் என்று நீங்கள் சொல்ல ராதிகா வீட்டில் இருப்பவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் இன்னொருத்தர் பார்த்துப்பாங்க ஆனால் எங்களுக்கு யாரு இருக்கா என சொல்லி கோபியை தடுத்து நிறுத்தி விடுகிறார்.

எழில் நேராக ஆசிரமத்துக்குச் சென்று அவர்களிடம் பேசி அம்மா சமைத்து கொடுத்த சாப்பாட்டில் மீதி இருக்கா என்று கேட்கின்றனர். அவர்களின் இருக்கு என்ன செஞ்சா அது கொஞ்சம் கொடுக்க முடியுமா எனக் கேட்டு இந்த சாப்பாடுகளை எடுத்துக் கொண்டு செல்கிறார். அப்போது அங்கே லட்டு இருந்ததையும் பார்க்கிறார். அதுவும் இவங்க கொடுத்தது தான் என்று அங்கிருந்த ஒருவர் சொல்ல அதையும் எடுத்துக் கொண்டு செல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் எழில் நீங்க கொடுத்த லட்டு மட்டும் தான் பிரச்சனை என சொல்ல செல்வி நாங்க லட்டு கொடுக்கவே இல்லை தம்பி என்று கூறுகிறார். பிறகு போலீஸ் ஸ்டேஷனில் ரிப்போர்ட்டை காண்பித்து பேச எதுவாக இருந்தாலும் போட்டு பார்த்துக்கோங்க என கூறுகிறார் போலீஸ்.

Baakiyalakshmi Serial Episode Update 19.04.22
jothika lakshu

Recent Posts

Jolliya Iruntha Oruthan Teaser

Jolliya Iruntha Oruthan Teaser | JIO | Jiiva, Sudhakar | Yuvan Shankar Raja | Rajesh…

13 hours ago

Oh Sukumari Lyrical Video

Oh Sukumari Lyrical Video (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath | Bharath Manchiraju

13 hours ago

Con City Official Trailer

Con City Official Trailer | Arjun Das | Anna Ben | Yogi Babu | Sean…

1 day ago

Nagabandham Tamil Official Trailer

Nagabandham Tamil Official Trailer | Abhishek Nama | Virat Karrna | Nabha Natesh

1 day ago

Rise Of Linga Lyric Video

Rise Of Linga Lyric Video | Magudam (Tamil) | Vishal | GV Prakash | Anjali…

1 day ago

Black Gold Official Trailer

Black Gold Official Trailer | Vetri, Priyalaya | Dheeran Arunkumar | Gavaskar Avinash

1 day ago