ராதிகாவிற்கு விருந்து ஏற்பாடு செய்யும் பாக்யா.. குடும்பத்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. இன்றைய பாக்யலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு உணவு கொடுத்து விட்டு ராதிகா காரில் சென்று கொண்டிருக்கும் போது மயூவை அழைத்துக் கொண்டு நாம ஒரு இடத்துக்கு போக போகிறோம் என்று கூறுகிறார்.

எங்கே ஹேட்டலா என கோபி கேட்க இல்லை என ராதிகா சொல்கிறார் பிறகு தியேட்டரா மாலா என கேட்க இல்லை டீச்சர் வீட்டுக்கு போகிறோம் என சொல்கிறார். மயூரா டீச்சர் வீட்டுக்கா என கேட்க பாக்கியா டீச்சர் வீட்டுக்கு என சொல்கிறார். அவங்களுக்கு உங்களை அறிமுகப் படுத்தி வைக்கணும்னு நான் ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்தேன். இன்னைக்கு அவங்க வீட்டுக்கு போகலாம் என சொல்லிவிட்டு பாக்யாவுக்கு போன் செய்து தன்னை கட்டிக்கப் போறவரோடு வீட்டிற்கு வருவதாக சொல்கிறார். பாக்கியா புக் மகிழ்ச்சியோடு வாங்க என அழைத்து அவர்களுக்காக விருந்து ஏற்பாடு செய்கிறார்.

கோபி எதை எதையோ சொல்லி இந்த திட்டத்தை மாற்ற முயற்சி செய்தும் ராதிகா உறுதியாக இருக்கிறார். அதன் பின்னர் பாக்யாவுக்கு போன் போட்டு வெளியே போகணும் நான் வந்து உன்னை கூட்டிக்கறேன் என சொல்ல பாக்யா ராதிகா அவங்க கல்யாணம் பண்ணிக்கிற வரை கூட்டிட்டு வீட்டுக்கு வர சொல்லி இருக்காங்க என சொல்லி வர மறுத்து விடுகிறார். இன்னைக்கு வசமாக சிக்கிக் கொண்டோம் என கோபி பதற்றத்துடன் காரை ஓட்டிக் கொண்டு சென்றிருக்கிறார்.

இந்த நேரத்தில் குழந்தைகள் ஆசிரமம் இல்லத்தில் இருந்து போன் செய்து சாப்பாட்டில் ஏதோ பிரச்சனை. குழந்தைகள் எல்லாரும் மயக்கம் போட்டு விடுங்க என சொல்ல ராதிகா பதறிப்போய் ஹோமிற்கு செல்கிறார். இந்தப் பக்கம் செழியன் விஷயம் தெரிந்து டிவி வைத்து பார்க்க குடும்பம் மொத்தமும் அதிர்ச்சி அடைகிறது.

ஹோமிற்கு சென்ற ராதிகா கோபி என அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். குழந்தைகள் வயிறு வலிக்குது என துடிக்கின்றனர். குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்னுனா உங்கள சும்மா விடமாட்டேன். போலீசில் புகார் அளித்திருப்பதாக ஆசிரமத்தில் இருப்பவர்கள் கூற ராதிகா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

இதனை தொடர்ந்து வெளியான புரோமோ வீடியோவில் போலீசார் வந்து விசாரணை செய்கின்றனர். நாங்கள் சாப்பாட்டை ஒரு மெஸ்ஸில் ஆர்டர் செய்து தான் வாங்கி வந்தோம் என கோபி சொல்கிறார். அந்த மெஸ்ஸின் பெயர் என்ன என போலீஸ் கேட்கின்றனர்.

Baakiyalakshmi Serial Episode Update 13.04.22
jothika lakshu

Recent Posts

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அவர்தான்.. ரஜினிகாந்த் குறித்து பேசிய சுராஜ் வெஞ்சாரமூடு..!

ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

38 minutes ago

ரஞ்சித் சொன்ன வார்த்தை, கடுப்பான சூர்யா, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

1 hour ago

பெண் வீட்டார் எடுத்த முடிவு.. சந்தோஷத்தில் மனோஜ் விஜயா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

4 hours ago

முதல் படம் அனுபவம் குறித்து நேர்காணலில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா.. யாரைப் பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…

21 hours ago

Heartin Teaser

https://youtu.be/N7kX6kLi-kQ?si=pKemvlWqjskeYDkV

21 hours ago

Thuru Thuru – Lyrical video

https://youtu.be/PWRE1SAnn8I?si=OcGj3Y6JNKzAG2gr

21 hours ago