ராதிகாவிடம் பேசிய கோபி.. பாக்கியாவை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் டீச்சரிடம் சமையல் ஆர்டர் கொடுத்திருப்பதாக சொன்னதும் கோபி கடுப்பாகிறார். எப்ப பாத்தாலும் டீச்சர் டீச்சர் என சொல்லிக் கொண்டே இருப்பதாக சொல்ல எனக்கு ஒரு சந்தேகம். எவ்வளவோ பிரெண்ட்ஸ் பத்தி உங்ககிட்ட பேசி இருக்கேன் அதுக்கெல்லாம் எதுவும் சொல்லாதீங்க டீச்சர் பத்தி சொன்னா மட்டும் ஏன் உங்களுக்கு கோபம் வருது? இதுல நீங்க டீச்சரை பார்த்ததுகூட கிடையாது? அதுதான் எனக்கு புரியவே இல்ல. உங்களுக்கும் டீச்சருக்கும் ஏதோ இருக்கு என ராதிகா சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். எதை எதையோ சொல்லி சமாளிக்க முயற்சி செய்கிறார். நான் நம்ப மாட்டேன் எனக் கூறுகிறார் ராதிகா.

இந்த பக்கம் எழில் ஆபீஸில் இருக்க அப்போது சதீஷ் ஜானு என்பவரை அழைத்து வருகிறார். குறும்படங்களில் எழிலோடு சேர்ந்து பணியாற்றிய இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எழிலை சந்திக்கிறார். இருவரும் சந்தோஷமாக பேசிக் கொள்கின்றனர். படத்தில் பணியாற்ற உதவி இயக்குனர் வேண்டும் என கேட்டல ஜானு ரெடியா இருக்காங்களா என்று சொன்னதில் எழில் எனக்கும் ஓகேதான் எனக் கூறுகிறார். இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது அமிர்தா ஆபீசுக்கு வருகிறார். இருவருக்கும் இடையே அறிமுகம் செய்து வைக்கிறார் எழில். ஜானு தம்மிடம் பணியாற்ற போவதாக எழும் சொன்னதைக் கேட்டு அமிர்தா அதிர்ச்சி அடைகிறார். வீட்டுக்குப் போன அவர் எழில் ஜானுவை காதலித்து விடுவாரோ என பயப்படுகிறார். ஜெயிலுக்கு போய் செய்ய அவர் ஜானுவிடம் பேசிக்கொண்டே இருக்கிறார். அமிர்தா போன் வந்ததும் கட் செய்துவிட்டு அவரிடம் பேசும்போது ஜானுவிடம் பேசிக் கொண்டிருப்பதாக சொல்ல அமிர்தா கோபப்படுகிறார். இதையெல்லாம் கவனித்த செழியன் இதெல்லாம் செட் ஆகாது என சொல்ல என் வாழ்க்கை நான் பார்த்துக்கிறேன் என்று கூறுகிறார் எழில்.

இந்த பக்கம் கோபி ரூமில் இருக்க உள்ளே வந்த பாக்கியா வாட்டர் பாட்டிலை வைக்கிறார். சரி வச்சிட்டு போ என கோபி சொல்ல பாக்கியா கதவை சாற்றி லாக் செய்கிறார். என்ன எது எனக் கேட்க வாங்க தூங்கலாம் இங்குதானே தூங்கணும், நீங்கதானே இனியாவுக்கு பிரைவேசி வேணும்னு சொன்னீங்க என சொல்லிவிட்டு படிக்கிறார். அத்தை தானே இங்கே படுத்து தூங்க சொன்னாங்க என பாக்கியா கூறுகிறார். அதன் பின்னர் பாக்கிய படுத்ததும் தூங்கிவிட கோபியின் போன் அடிக்க அதுக்குள்ள முடிஞ்சிடுச்சா அலாரம் அடிக்குது என அலறி அடித்து எழுந்து கொள்கிறார். அது ஏன் போனை இன்னும் விடியல படுத்து தூங்கு பாக்கியா கோபி சொல்கிறார். பிறகு கோபி போனில் மெதுவாக இங்க டவர் பிராப்ளம் இருக்கு, டூ மினிட்ஸ் கால் பண்றேன் என சொல்லிவிட்டு நைசாக வெளியே எழுந்து சென்று விடுகிறார்.

இதனை பாக்கியா பார்த்துவிட இந்த நேரத்தில் யார் கிட்ட பேசுறாரு என குழம்புகிறார். மறுநாள் காலையில் பாக்கியா குளிக்க பாத்ரூம் சென்று விட பாக்கியா இருப்பது தெரியாமல் கோபி ராதிகாவிடம் ஜொள்ளு விட்டு பேசிக் கொண்டிருக்கிறார். குளித்து விட்டு வெளியே வந்த பாக்கியா கோபி இப்படி வழிந்துகொண்டு பேசுவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். போனில் பேசி முடித்து விட்டுத் திரும்பிய கோபி பாக்யாவை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌‌

Baakiyalakshmi Serial Episode Update 09.04.22
jothika lakshu

Recent Posts

Vaaya Ey Karasaami – Lyric video

https://youtu.be/i-SlZWXhsd4?si=1N9gbFT1GUcpQsmr

20 hours ago

Gin – Uh Jimikki – Lyrical video

https://youtu.be/hj4d6WUhxcE?si=JfKqqJooJHSyKSsg

23 hours ago

வெறுப்பேற்றும் ஹரிதா..சூர்யா கொடுத்த பதில்..மூன்று முடிச்சு சீரியல் எபிசோட் அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

23 hours ago

விஜய் சாஃப்ட் ஆனவர்.. அஜித் பர்பெக்ட் ஃபேமிலி மேன்.. தமன்னாவின் லேட்டஸ்ட் பேச்சு.!!

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…

23 hours ago

காலம் பேசாது.. நிச்சயம் களத்தில் சந்திப்போம்…ரஜினி ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்..!

மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

1 day ago

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட விஜய் சேதுபதி..!

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…

1 day ago