BaakiyaLakshmi Serial Episode Update 07-08-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சங்கீத் மற்றும் ரிசெப்ஷன் முடிந்துவிட பிறகு குடும்பத்தினர் அனைவரும் சேரில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர் அதுக்குள்ளேயும் ரிசப்ஷன் முடிஞ்சிடுச்சு இன்னும் கொஞ்சம் பேரு கூப்பிட்டு இருக்கலாம் பாக்கியா என்று சொல்ல கூப்பிட்டு இருக்கலாம் ஆனால் இவங்கதான் சிம்பிளா நடந்தா போதும்னு சொல்லிட்டாங்க என்று சொல்ல இனியா நாங்கள் இதைவிட சிம்பிளாவே பண்ணி இருக்கலாம் ஒரு கோவில்லையோ இல்ல ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கூட பண்ணி இருக்கலாம் என்று சொல்ல எங்களுக்குன்னு ஆசை இருக்குல்ல என்று பாக்யா சொல்லுகிறார். உடனே இனிய கல்யாணம் முடிந்தது அதுக்கப்புறம் என்ன விசேஷம் என்று கேட்க அமிர்தாவோட வளைகாப்புதான் என்று சொல்ல மீண்டும் அமிர்தாவின் அம்மாவும் ஈஸ்வரியும் வளைகாப்புக்கு எங்க வீட்ல தான் இருக்க வேண்டும் என பேச ஆரம்பிக்க பாக்யா முதல்ல வளைகாப்பு வரட்டும் முடிஞ்சதுக்கு அப்புறம் அமிர்தா எங்க இருக்கணும்னு நினைக்கிறா அங்க இருக்கட்டும் என சொல்லி முடிக்கிறார்.
உடனே கோபி எப்பவுமே நம்ம வீட்ல ஒரு பங்க்ஷன் என்றால் டான்ஸ் ஆடி சந்தோஷமா இருப்போம் இப்ப எதுவுமே காணோம் என்று சொல்ல எழில் ஆடிட்டா போகுது என அமிர்தாவை கூட்டிக்கொண்டு ஸ்டேஜ்க்கு போக ஜெனி செழியன் போகின்றனர். இருவரும் டான்ஸ் ஆட பிறகு இனியா மற்றும் ஆகாஷ் இருவரும் டான்ஸ் ஆடுகின்றனர். பிறகு பாக்யா என குடும்பத்தினர் அனைவரும் டான்ஸ் ஆட ஈஸ்வரி கோபி பார்த்து சந்தோஷப்படுகின்றனர். மறுநாள் காலையில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க ராதிகா மயூவுடன் வருகிறார். பாக்யாவும் கோபியும் அவர்களை வரவேற்று விசாரிக்க பாக்கிய மயூவை இனியா ரூமுக்கு அழைத்துச் செல்ல கோபியும் ராதிகாவும் பேசிக்கொள்கின்றனர்.
நலம் விசாரித்துவிட்டு பிறகு லைஃப்ல வேற யாராவது வந்திருக்காங்களா என்று கேட்க உங்களை வேற யாராவது வந்திருக்காங்களா? என ராதிகா கேட்கிறார் யாருமில்லை போதும் என சொல்ல நீங்க மட்டும் போதும் எனக்கு மட்டும் எதுக்கு கேக்குறீங்க நான் யாரோ லைஃப் பார்ட்னர் இல்லாம சந்தோஷமா தான் இருக்கேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் பிறகு இனியாவை வந்து சந்தித்து ராதிகா நலம் விசாரித்துவிட்டு அமிர்தாவுக்கு கங்கிராஜுலேசன் சொல்லுகிறார் பிறகு செல்வி வந்து பார்த்தவுடன் செல்விக்கு வாங்க கலெக்டர் அம்மா என்று கூப்பிட என்ன மேடம் நீங்களே இப்படி கூப்பிடுறீங்க என்று சொல்ல நீங்களும் ஒரு முக்கிய காரணம்தான என்று சொல்லி பேசுகிறார். உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு எல்லா பசங்களுக்கும் உங்கள மாதிரி ஒரு அம்மா கிடைக்கனும் என சொல்ல செல்வி சந்தோஷப்படுகிறார்.
பிறகு பொண்ணு மாப்பிள்ளையை அழைச்சிட்டு வாங்க என்று சொல்லி ஐயர் ஏற்பாடுகளை செய்ய திருமணமும் நல்லபடியாக நடந்து முடிகிறது. பிறகு தாலி கட்டி முடிந்தவுடன் ராமமூர்த்தி ஈஸ்வரி கண்ணுக்குத் தோன்றி இவங்க ரெண்டு பேரும் சந்தோஷமாக இருப்பார்கள் என ஆசிர்வாதம் செய்கிறார் அவனைப் பார்த்து ஈஸ்வரி சந்தோஷப்படுகிறார். பிறகு இருப்பவர்கள் காலில் விழுந்து வெளியாகும் ஆகாஷ் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு புகைப்படங்களை எடுத்துக் கொள்கின்றனர்.
வீட்டுக்கு வந்து அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்க அவர்கள் என்ன பேசுகின்றன? ஈஸ்வரி என்ன சொல்லுகிறார்?அதற்கு செல்வியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம் .
பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
Yolo Official Trailer | Dev, Devika, Akash, VJ Nikki, Badava Gopi | S Sam|Sagishna Xavier…
Idhu Devadhai Nerame Lyrical Video | Kumaara Sambavam | Kumaran, Payal | Achu Rajamani
Gandhi Kannadi Official Trailer | Bala, Namita, Balaji Sakthivel, Archana | Vivek-Mervin | Sherief
Oorum Blood Video Song | Dude | Pradeep Ranganathan, Mamitha Baiju | SaiAbhyankkar | Paal…
Mirai Tamil Trailer | Teja Sajja | Manchu Manoj | Karthik Gattamneni | AGS |…