baakiyalakshmi serial episode update 07-04-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா சோகமாக இருக்க பாக்கியா ஆறுதல் சொல்லுகிறார். அதற்கு இனியா அப்பாவுக்கு உடம்பு சரியில்லன்னு தான் அங்க போன ஆனா அங்க கூட கல்யாணம் விஷயத்தை பத்திதான் பேசுறாங்க என்று சொல்ல பாக்யா அப்ப நீ வேற என்ன பேசுவாங்கன்னு எதிர்பார்த்த இனியா எனக்கு தெரிஞ்சு உங்க அப்பா நடிக்கிறார் என்று நான் நினைச்சேன் ஆனால் உண்மையா உடம்பு சரியில்லன்னு சொல்ற ஆனா அந்த வாய்ப்பையும் அவங்க இதுக்கு தான் பயன்படுத்துவாங்க என்று சொல்லுகிறார். இப்ப நான் என்னம்மா பண்றது என்று சொல்ல நேத்து நைட் வரைக்கும் கல்யாணம் வேணாம்னு முடிவுல உறுதியா இருந்த நீ இப்ப என்ன பண்ணட்டும்னு கேட்டா என்ன சொல்றது இனியா என்று சொல்ல எனக்கு அப்பாவும் பேசறது கேட்டு மனசு கஷ்டமா இருக்குமா என்று சொல்லுகிறார்.
இங்க பாரு இனியா என்னோட அப்பா இறந்ததுக்கு அப்புறம் என்னோட அம்மா உன்ன யார்கிட்டயாவது புடிச்சு கொடுக்க வேண்டும் என சொல்லி பேசிகிட்டு இருக்கும்போது தான் உங்க தாத்தா வரன் கேட்க வந்தாரு உடனே பேசி முடிச்சிட்டாங்க என்னால அங்க எதுவுமே பேச முடியல இப்போ என்னோட வாழ்க்கைய புரிஞ்சி முன்னேறி வர்றதுக்குள்ள எனக்கு 40 வயசு ஆயிடுச்சு அந்த நலமா உனக்கு வரக்கூடாது இப்போ நான் தனியா தான் கஷ்டப்பட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார் அது மட்டும் இல்லாமல் எழில் முதல்ல அப்பா என்ன இன்ஜினியர் ஆகணும்னு சொன்னாரு ஆனா என்னோட ஆம்பிசனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதையே எதிர்த்து நின்னு ஜெயிச்சிருக்க இப்போ அப்பா பிரவுடா தானே ஃபீல் பண்றாரு அதே மாதிரி நீயும் நல்லா படிச்சு பெரிய ஆளா ஆகு இனியா அப்பா கண்டிப்பா உன்ன பத்தி ப்ரவுடா பீல் பண்ணுவாரு என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் இனியா கோபியை பார்க்க வர அங்கு செழியன் ஈஸ்வரி கோபி நால்வரும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்.கோபி நெஞ்சுவலியாக இருக்கிறது என்று சொல்ல செழியன் இனியாவிடம் இப்ப கூட உன் மனசு இறங்கவில்லையா இனிய என்று கேட்கிறார் அது எவ்வளவு பெரிய வீடு எப்படிப்பட்ட வாழ்க்கை தெரியுமா என்று சொல்லுகிறார் உடனே கோபி இங்க பார் இனியா இப்ப வரைக்கும் படிக்கணும்னு சொல்லிக்கிட்டு இருக்கிறதெல்லாம் எனக்கு ஒன்னும் புரியல நீ கல்யாணம் பண்ணிட்டு போகப் போற வீடியோ ரொம்ப பெருசு உன்னோட லைஃப் செட்டில் ஆயிடும் அவருக்கு ஒரே பையன் இந்த வாழ்க்கையை போய் யாராவது வேண்டாம்னு சொல்லுவாங்களா தினமும் ஒரு கார்ல போகலாம் என்று ஃபாரின் ட்ரிப் என்ஜாய் பண்ணலாம் இதையெல்லாம் நீ எதுக்கு வேண்டாம்னு சொல்ற ஏதாவது நல்ல முடிவாயோ சொல்லு இனியா என்று பேசிக் கொண்டிருக்கும் போதே மீண்டும் நெஞ்சுவலிப்பது போல் கோபி ரொம்ப நேரம் பேச முடியல மா நான் உள்ள போறேன் என்று சென்று விடுகிறார்.
உடனே ஈஸ்வரி என் பையனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா நான் உன்னை மன்னிக்கவே மாட்டேன் என்று கோபமாக பேசுகிறார் இதனால் இனியா என்ன செய்வது என புரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறார். சுதாகர் குடும்பத்துடன் சாப்பிட்டுக் கொண்டிருக்க மகனிடம் பிசினஸ் விஷயம் பற்றி பேசுகிறார் உடனே மனைவி அமைதியாக இருக்க என்னாச்சு சந்திரிகா எதுவும் பேச மாட்டேங்குற என்று சொல்ல என் தம்பி என் மேல கோவமா இருக்கான் என்று சொல்ல என்ன விஷயம் என்று கேட்கிறாள் அவன் நித்தீஷ்க்கு நாலஞ்சு பொண்ணு வரன் பார்த்தான் நீங்க அந்த இனியாவ கட்டி வைக்கணும்னு சொல்றீங்க எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை கேட்கக் கூடாதுன்னு நினைச்சாலும் கேட்காம இருக்கவும் முடியல நம்மளோட ஸ்டேட்டஸ்க்கு கொஞ்சம் கூட தகுதி இல்லாதவங்களை எதுக்கு நித்திஷ்க்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று கேட்க உடனே நித்திஷ் எல்லாம் ரெஸ்டாரன்ட் தான் என்று சொல்லுகிறார் என்னடா சொல்ற என்று கேட்டேன் எல்லாம் தெரியும் பா என்று சொல்லுகிறார். நானே அவங்க கிட்ட கேட்டேன் எவ்வளவு பணம் கேட்டு இருந்தாலும் கொடுத்து இருப்பேன் ஆனா கொடுக்கல அவங்க பொண்ண கல்யாணம் பண்ணிட்டா பொண்ணுக்கு என்று கேட்டால் கொடுக்காமல் போயிடுவாங்க என்று சொல்லுகிறார். அது மட்டும் இல்லாம அவங்க ஒன்னும் இல்லாத குடும்பம் இல்ல கோபியும் ஒரு கிளவுட் கிச்சன் வெச்சிருக்காரு அது மட்டும் இல்லாம நம்ம ஒரு கிச்சனை வாங்கிட்டோம்னா இன்னொரு ரெஸ்டாரன்ட் பாக்கியாவுக்கு இருக்கு அது செழியன் ஆபீஸ்ல வேலை செய்கிறான். சின்ன பையன் டைரக்டரா இருக்கா ஒரு அளவுக்கு வசதியான குடும்பம் தான் நீ நினைக்கிற அளவுக்கு இருக்காது என்று சொல்லுகிறார். உடனே நித்திஷிடம் உனக்கு ஓகேவாடா என்று கேட்க பொண்ணு ஓகே தான் இருந்தாலும் அம்மா சொல்ற மாதிரி கொஞ்சம் வசதியா இருந்திருக்கலாம் என்று சொல்ல அதுக்கு நீ முதல்ல ஒழுங்கா இருக்கணும் என்று சுதாகர் சொல்லுகிறார்.
என்னங்க சொல்றீங்க என்று கேட்க பின்னே இவன் ட்ரக்கேஸ்ல அரஸ்ட் ஆகி ஸ்டேஷன் போயிட்டு வந்தவன் தானே நம்ம தெரிஞ்சவங்களுக்கும் உள்ள பெரிய இடத்துக்கு எல்லாருக்கும் இவன் மேல கேஸ் இருக்கிறது தெரியும் கோபி ஃபேமிலிக்கு நம்ம பெரிய இடம் என்பதுனால எதுவும் விசாரிக்கல எனக்கு ரெஸ்டாரன்ட் வந்த மாதிரியும் இருக்கும் இவனுக்கு கல்யாணம் ஆன மாதிரியும் இருக்கும் என்று சொல்லுகிறார்.
மறுநாள் இனியவை காபி ஷாப்புக்கு கூட்டிட்டு வந்தபோது இனியா ரெஸ்ட் எடுக்காமல் ஏன் டாடி அலஞ்சிகிட்டு இருக்கீங்க என்று கேட்க என் பொண்ணு குழப்பத்துல இருக்கும்போது நான் எப்படி ரெஸ்ட் எடுக்க முடியும் என்று சொல்லிவிட்டு முக்கியமான ஒருத்தர் வராரு அவர்கிட்ட பேசினா உனக்கு எல்லா ப்ராப்ளமும் சால்வ் ஆகிடும் என்று சொல்லுகிறார் கொஞ்ச நேரத்தில் நித்திஷ் வர கோபி அவரை வரவேற்று உட்கார வைக்கிறார் பிறகு அவர்கள் என்ன பேசுகின்றனர்? நித்திஷ் என்ன கேட்கிறார்? அதற்கு இனியாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…