பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகாவிற்கு குழந்தை பிறந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அமிர்தா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரித்திகா. சமீபத்தில் திருமணம் முடிந்த நிலையில் சீரியலில் இருந்து விலகினார்.
சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து பிரக்னன்சி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்தப் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
சட்டம் என் கையில் என்னும் படத்தில் ரித்திகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவருக்கு செப்டம்பர் பத்தாம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.
அதனை instagram பக்கத்தில் “எங்கள் மகள்” என்று பதிவிட்டு குழந்தையின் அழகான பாதங்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரித்திகாவின் இந்த பதிவால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram