Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபியால் கோபத்தில் ராதிகா. கோபியின் அப்பா கொடுத்த ஷாக். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் மற்றும் பாக்யா என இருவரும் பேசிக் கொண்டிருக்க அப்போது வந்த ஜெனி செழியன் ஈஸ்வரி பாட்டி இடம் அமிர்தா எழில் பற்றி கூறியதை சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.

இந்த பக்கம் ராதிகா ஆசை ஆசையாக பிரியாணி சமைத்துவிட்டு எல்லோரும் அதை சாப்பிட்டு சூப்பர் என பாராட்டுவது போல கனவு காண்கிறார் பிறகு எல்லோருக்கும் பிரியாணியை பரிமாற யாரும் எதுவும் சொல்லாமல் இருக்க கோபி சூப்பரா இருக்கு பென்டாஸ்டிக் எந்த ஹோட்டல்ல வாங்குன இதே ஹோட்டலில் வாங்கு என சொல்ல ராதிகா கடுப்பாகிறார்.

அடுத்ததாக கோபியின் அப்பா 15 வருஷமா பாக்யா விதவிதமான ஒரு நாள் கூட நல்லா இருக்குன்னு வாயை திறந்து சொன்னது இல்ல, உனக்கு மட்டும் சொல்லுவாங்க எதிர்பாக்குறியா தெரியாம மாட்டிக்கிட்ட என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். அடுத்து கோபிக்கு ராதிகா சமைத்த விஷயம் தெரிய வர சாரி கேட்டு கைக்கு நச்சென்று முத்தம் கொடுக்க அந்த நேரத்தில் இனியா வந்து விடுகிறார்.

பிறகு எழில் வீட்டுக்கு வர ஈஸ்வரி அவனைக் கூப்பிடு ஏதாவது கேட்க அப்படி எல்லாம் எதுவும் இல்லை என எதுவும் இல்லை என சொல்கிறார். இருந்தாலும் ஈஸ்வரி எழிலின் கையை தூக்கி தலையில் வைத்து அமிரதா உனக்கு பிரண்டா மட்டும்தான் இருக்கணும், வேற எதாவது இருந்தா நான் சும்மா இருக்க மாட்டேன் இது இந்த பாட்டி மேல சத்தியம் என சொல்ல எழில் பாக்கியா என இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update