கோபியிடம் நக்கலாக பேசிய பாகியா..கடுப்பான கோபி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் போஸ்ட் மேன் கோபியின் வீட்டை விட்டு வெளியே வர அப்போது கோபி இந்த வீட்டிலிருந்து வெளியே வந்து போஸ்ட் மேனிடம் கோபிநாத் பெயருக்கு ஏதாவது லெட்டர் வந்திருக்கா என கேட்க போஸ்ட்மேன் நடந்து விஷயங்களை சொல்லி என்னாச்சு ஏதாச்சு என விசாரிக்க கோபி லெட்டர் மட்டும் கொடுங்க என வாங்கிக் கொண்டு வந்து விடுகிறார்.

வீட்டுக்கு வந்ததும் என்னாச்சு தெரியுமா அவங்க இந்த வீட்ல கோபிநாத் யாருமே இல்லன்னு சொல்லி அனுப்பி இருக்காங்க என கோபப்பட அவங்க இதைத்தான் சொல்லுவாங்க வேறு என்ன எதிர்பார்க்கிறிங்க என ராதிகா கேட்க ஒரு பேச்சுக்காவது பக்கத்து வீட்ல இருக்காங்க குடுங்கன்னு சொல்லி இருக்கலாம் என கோபி கூறுகிறார். பின்னர் ராதிகா அதுக்குத்தான் அட்ரஸ் மாத்திடுங்க அதுதான் ஒரே வழி, நமக்குன்னு புது ரேஷன் கார்டு அப்ளை பண்ணனும் என சொல்ல அதெல்லாம் பெரிய வேலை என கோபி கூறுகிறார். நமக்குன்னு அட்ரஸ் ப்ரூப் வேணும் அதனால அதை பண்ணித்தான் ஆகணும் அதுக்கு முதல்ல நீங்க உங்க வீட்டு ரேஷன் கார்டில் இருந்து உங்கள் பெயரை நீக்கி கொண்டு வரணும் என சொல்கிறார்.

அடுத்து கோபி பாக்கியாவுக்கு போன் போட்டு கோபிநாதன் பெயருக்கு லெட்டர் வந்தால் யாரும் இல்லைன்னு சொல்லியா அனுப்புறீங்க, உங்களுக்கெல்லாம் கொழுப்பு அதிகமாயிடுச்சு என சத்தம் போட அதை வாங்கி வச்சு நாங்க என்ன பண்ணுறது என பாக்கியா கூறுகிறார். அடுத்து முதல்ல நான் அட்ரஸ் மாத்தணும் என் பேரு ரேஷன் கார்டில் இருந்து நீக்கணும் என சொல்ல நான் கேட்டரிங் வேலை பார்க்கிறேன், இந்த வேலையெல்லாம் எனக்கு தெரியாது என பாக்யா நக்கல் அடிக்கிறார்.

என்ன நக்கல் பண்றியா என்ன கோபி சத்தம் போட இப்ப நான் என்ன பண்ணனும் பேனா எடுத்து ரேஷன் கார்டுல உங்க பேரு அழிச்சிடவா என கேட்க எனக்கு ரேஷன் கார்டு வேணும் எடுத்துக் கொடு என கோபி கேட்க அதெல்லாம் என்கிட்ட இல்ல மாமா கிட்ட இருக்கு, என சொல்லி போனை வைத்து விடுகிறார். இந்த பக்கம் ராதிகா நீங்க என்ன அவங்களுக்கு எதுக்கு போன் பண்ணீங்க? உங்க அம்மா அப்பா கிட்ட கேட்க வேண்டியது தானே அவ்வளவு லெந்தா பேசுறீங்க எனக்கு கொஞ்சம் கூட புடிக்கல என ராதிகா சத்தம் போட்டுவிட்டு உள்ளே சென்று விடுகிறார்.

25 வருஷமா அவகிட்ட கஷ்டப்பட்டு இனி வாழ்க்கை முழுக்க உன்கிட்ட கஷ்டப்படணும் என கோபி புலம்புகிறார். இவதான் போன் பண்ண சொன்னா இவளே இப்போ சண்டை போட்றா, முடியல என்னால என புலம்பி தவிக்கிறார்.

அடுத்ததாக எழில் அமிர்தா வீட்டுக்கு போக அப்போது அவர்கள் உங்கள் வீட்டில் இருந்து யாராவது வந்து அமிர்தாவை கல்யாணம் பண்ணி வைக்க எங்களுக்கு சம்மதம் என சொல்லணும் என சொல்ல எழில் கண்டிப்பாக பேச வைக்கிறேன் என வாக்கு கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

Happy Raj – Official Trailer

Happy Raj - Official Trailer ,GV Prakash , Abbas ,Sri Gouri Priya ,Maria Raja Elanchezian…

11 hours ago

காலம் பேசாது.. ஆனால்? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் டயலாக் இதோ..!

காலம் தான் பதில் சொல்லும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

13 hours ago

அஜித் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. எதிர்பார்பை எகிற வைக்கும் அப்டேட் இதோ..!

அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும்…

14 hours ago

நெல்சன் இயக்கத்தில் உருவாக போகும் படத்தின் டைட்டிலை பார்த்தவுடன் ரஜினிகாந்த் செய்த செயல்..!

#RKxKH என்ற தலைப்பை பார்த்து ரஜினிகாந்த் பதறிப் போய் உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர்…

14 hours ago

கல்யாணத்தை அறைந்த ஹரிதா.. சூர்யா சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

14 hours ago

விஜயா கேட்ட கேள்வி.. சிந்தாமணி கொடுத்த பதில்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

ரோகினி செய்த வேலையால் மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…

19 hours ago