Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எழிலால் குழப்பத்தில் அமிர்தா.. இனியாவால் மகிழ்ச்சி அடைந்த பாக்கியா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் இனியா ராதிகா வீட்டுக்கு போன விஷயத்தை சொல்ல ஈஸ்வரி இங்கே என்ன நடந்துட்டு இருக்கு நீ எதுக்கு அவங்க வீட்டுக்கு போன என கேட்க எனக்கு தெரியாம தான் போனேன் அங்க போனதும் எனக்கு இருக்க கொஞ்சம் கூட புடிக்கல உடனே வந்துட்டேன் என கூறுகிறார்.

பிறகு ஈஸ்வரி எல்லாம் உன்னால தான் என சொல்ல அவர் இந்த வீட்டை விட்டுப் போனதுக்கு ஒரு காரணம் நான் கூட சொல்லுங்க ஆனா அவர் கண்ட இடத்துக்கு போறதுக்கு நான் தான் காரணம்னு சொல்லாதீங்க அது என்னால ஏத்துக்க முடியாது என கூறுகிறார். அவருக்கும் எனக்கும் சட்டப்படி எந்த சம்பந்தமும் இல்லை அவர் எங்க போனார் எனக்கென்ன என பாக்யா சொல்ல உடனே செழியன் எந்த சம்பந்தமும் இல்லையா அப்போ எங்களுக்கும் அப்பாவுக்கும் சம்பந்தம் இருக்கா இல்லையா என கேட்க தாத்தா ராமமூர்த்தி திட்டுகிறார்.

பிறகு இனியா ரூமுக்குள் தண்ணீர் பாட்டிலை பாக்யா எடுத்துக் கொண்டு சென்று வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பும்போது இனியா அம்மாவின் மனதை புரிந்து கொண்டு சாப்பிட்டியா என கேட்க பாக்யா சந்தோஷப்படுகிறார். அப்பா கூட வெளியில போனதுல உனக்கு வருத்தமா என கேட்க அதெல்லாம் இல்ல நீ தேவையில்லாத நெனச்சு வருத்தப்படாத என சொல்கிறார்.

இந்த பக்கம் எழில் அவருடைய தயாரிப்பாளரின் மகள் வர்ஷினியுடன் பைக்கில் பார்த்து அதனை அமிர்தாவின் அப்பா பார்த்து விட அதிர்ச்சியடைகிறார். பிறகு வீட்டில் இல்லை பைக்கில் ஒருவருடன் பார்த்ததை நினைத்து சொல்லி வருத்தப்பட எழில் அப்படிப்பட்டவர் கிடையாது கண்ணால் பார்ப்பது பொய் என ஆதரவாக பேச பிறகு பார்த்து நடந்துக்க என கூறி இருவரும் உள்ளே சென்றுவிட ஒருவேளை இதெல்லாம் உண்மையா இருக்குமோ என அமிர்தா குழம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 baakiyalakshimi serial episode update

baakiyalakshimi serial episode update