பாக்யா சொன்ன வார்த்தை, ஜெனி எடுத்த முடிவு,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி‌. இன்றைய எபிசோடில் பழனிச்சாமி வீட்டுக்கு வந்த பாக்கியா உங்களுக்கு புடிச்ச எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, இறால் தொக்கையும் கொண்டு வந்திருக்கேன் என்று கொடுக்க வாசனையே கம கமன்னு வருது என்று பழனிச்சாமி ‌சொல்கிறார். சார் உங்களுக்கும் சேர்த்து தான கொண்டு வந்திருக்கிறேன் என்று கூறுகிறார்.

இதையடுத்து பாக்கியா ரெஸ்டாரன்ட் போக வேண்டும் என்று கேப் புக் பண்ண பழனிச்சாமியின் அக்கா எங்க வீட்டுக்கு வந்துட்டு எதுக்கு கேப்ல போறீங்க, இங்கதான் இத்தனை கார் இருக்கே என்று சொல்லி பழனிச்சாமி அனுப்பி வைக்க பழனிச்சாமி காரில் பாக்கியாவிடம் உங்களுக்குப் பிடித்தது என்ன என்று கேட்டுக் கொண்டே செல்கிறார். பாக்யா இதுவரைக்கும் என்கிட்ட இப்படி யாரும் கேட்டதே கிடையாது. எங்கம்மா பால் கொழுக்கட்டை செஞ்சு கொடுப்பாங்க அது எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த மாதிரி நான் எவ்வளவோ முறை செஞ்சோம் அந்த டேஸ்ட் வரவே இல்ல என்று சொல்கிறார்.

பழனிச்சாமி மனசுக்குள் கண்டிப்பா உங்களுக்கு புடிச்ச மாதிரி அதே டேஸ்ட்ல பால் கொழுக்கட்டை செஞ்சு தருவேன் என்று நினைத்துக் கொள்கிறார். இங்கே ஹோட்டலில் அமுதாவும் ஏழும் ஒன்றாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்த செல்வி ஹோட்டல்ல எல்லாமே காதல் ஜோடியா இருக்கு இங்க நீங்களும் காதல் ஜோடியா நின்னுக்கிட்டு இருக்கீங்க என்று கலாய்க்கிறார்.

பிறகு பாக்கியாவும் பழனிச்சாமியும் ஜோடியாக வந்து இறங்க அதை பார்த்து தெரிந்து இன்னொரு காதல் ஜோடி வந்துடுச்சு என்று சொல்கிறார். மேலும் எழிலிடம் தம்பி அக்காவுக்கும் அண்ணனுக்கும் பிடிச்சிருந்தா நீங்க என்ன பண்ணுவீங்க என்று கேட்க கல்யாணம் பண்ணி வச்சிடுவேன் என்று எழில் சொல்கிறார்.

பழனிச்சாமி உள்ளே வந்ததும் பாக்கியா நீங்க பேசிட்டு இருங்க என்று கிச்சனுக்குள் செல்ல நீங்க வரதுக்கு முன்னாடி தான் எழில் தம்பி உங்களுக்கும் அக்காவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு பேசிட்டு இருந்துச்சு என்று உண்மையை உளறி கொட்ட பழனிச்சாமி அதிர்ந்து போய் நிற்கிறார்.

அடுத்ததாக பாக்கியா, செழியன் மற்றும் தாத்தா ராமமூர்த்தி ஆகியோர் ஜெனியின் வீட்டுக்கு வந்து குழந்தைக்கு பேர் வைக்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பு கொடுக்க ஜோசப் கண்டிப்பா நாங்க வர மாட்டோம் என அதிர்ச்சி கொடுக்கிறார். பாக்யா பழசு எல்லாம் மறந்துட்டு இரண்டு குடும்பமும் ஒன்னா தேதி இந்த நிகழ்ச்சியை நடத்தும் என்று சொல்கிறார். குழந்தைக்கு என்ன பெயர் வைக்க போறீங்க உங்க முறைப்படி தானே பேர் வைக்க போறீங்க என்றெல்லாம் சொல்ல நாங்க கோவில்ல வைக்கல வீட்ல தான் வச்சிருக்கோம் இதை பங்ஷன் முடிஞ்ச பிறகு நீங்கள் சர்ச்சை கூட்டிட்டு போய் வழக்கப்படி கூட பெயர் வைங்க. எங்க வீட்ல கோவிலுக்கு கூட்டிட்டு போகட்டும் அதுல ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லி கூப்பிட்டு கிளம்பி வருகிறார்.

பிறகு ஜெனியின் அம்மா மரியம் எதுக்கு ஜோசப் இப்படி பேசினீங்க நாம எல்லாத்தையும் மறந்துட்டு நம்ம வீட்டு குழந்தைக்காக இந்த ஃபங்சனுக்கு போய் தான் ஆகணும் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி!

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…

16 hours ago

‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்..

'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…

19 hours ago

‘போர்முழக்கம்’ வக்கீலாக களமிறங்கும் வடிவேலு

'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…

19 hours ago

“விஜய்தான் எனக்கு குரு!” – இயக்குநர் பாலா பேச்சு

"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…

20 hours ago

ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்?

ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…

20 hours ago

தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி!

தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…

20 hours ago