ஜெனி எடுத்த முடிவு,சந்தோஷத்தில் பாக்யா,மரியம்,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யாவும் செழியனும் ஒன்று சேர பிறகு வெளியில் மரியம் மற்றும் பாக்யா சந்தோஷத்தில் கண் கலங்குகின்றனர்.

அதன் பிறகு செழியனும் ஜெனியும் ரூமில் இருந்து வெளியே வர எழில் இரண்டு பேரும் சேர்ந்து என்ன முடிவு பண்ணி இருக்கீங்க என்று கேட்க இருவருமே அமைதியாக இருக்கின்றனர். பிறகு எழில் நானே சொல்கிறேன் ஜெனி நீங்க நம்ம வீட்டுக்கு வர போறீங்க அதானே என்று கேட்க ஜெனி கொஞ்ச நேரம் கழித்து ஆமாம் என தலையாட்ட எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.

செழியன் பாக்யாவை கட்டிப்பிடித்து நன்றி சொல்கிறார். ஜெனி தனது அம்மாவை கட்டி பிடிக்க அவர் சந்தோஷம் ஜெனி என ஆசிர்வாதம் செய்கிறார். பிறகு பாக்யா நான் ஜெனியை வீட்டுக்கு கூட்டிட்டு போகவா என்று கேட்க ஜோசப் கிட்ட சொல்லாம தான் வந்தோம் வீட்டுக்கு வந்து அவர்கிட்ட சொல்லிட்டு போங்க என்று சொல்ல எழில் அவர் கோபப்படுவார் என்று சொல்ல மரியம் நான் பாத்துக்குறேன் என சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து எல்லோரும் கிளம்பி வீட்டுக்கு வர ஜோசப் வெளியே வந்து நிற்க எல்லோரும் ஒன்றாக வந்து நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். செழியன் குழந்தையுடன் இருக்க நீ எதுக்குடா இங்க வந்த குழந்தை எதுக்கு நீ வச்சுட்டு இருக்க என்று குழந்தையை பிடுங்க போக மரியம் தடுத்து நேரத்தில் உள்ள வாங்க பேசிக்கலாம் என அழைத்துச் செல்கிறார்.

மதியம் நாங்க சர்ச்சுக்கு போகல ஜெனியும் செழியனையும் பேசிக்க வைக்கத்தான் போயிருந்தேன் என்று சொல்ல ஜோசப் கோபப்பட சரி பிரச்சனை தீர்ந்து விட்டதா என்று கேட்க பாக்யா தீர்ந்து விட்டது என சொல்ல அதிர்ச்சி அடைகிறார். அடுத்ததாக ஜோசப் அதெல்லாம் தீரவே தீராது நீங்க சொல்ற நாடகத்துக்கு எல்லாம் என் பொண்ணு நடிக்க மாட்டா என்று சொல்ல அவங்க ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்க ஒன்னாவது முடிவு பண்ணி இருக்காங்க என்று சொல்ல தெரியல என்னமா சொல்றாங்க என்று கேட்க ஆமா டாடி செழியனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தரலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் என கூறுகிறார்.

ஜோசப் இந்த வாழ்க்கை வேண்டாம் என்று சொல்ல மரியம் செழியன் தப்ப உணர்ந்துட்டாரு என்ன சொல்ல ஜோசப் அதெல்லாம் சரி வராது. யாருமே தப்பு பண்றது இல்லையா ஏன் நீங்க தப்பு பண்ணலையா என்று கேள்வி கேட்டு ஜோசப்பை மடக்குகிறார். இதனால் ஜோசப் பதில் பேச முடியாமல் உள்ளே சென்றுவிட மரியம் அவரை நான் பார்த்துக்கிறேன் என சொல்கிறார்.

பிறகு ஜெனியிடம் முன்ன மாதிரி இருக்காத, எங்க போறான் எங்க வர்றான்னு கவனி இன்னொரு முறை இந்த மாதிரி பிரச்சனை வரக்கூடாது என அறிவுரை வழங்குகிறார். மறுபக்கம் ஈஸ்வரி பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு போகல, ரெண்டு பேரையும் கூப்பிட்டுக்கிட்டே ஜோசப் வீட்டுக்கு தான் போயிருப்பேன் என்று சொல்ல கோபி இந்த பாக்கியா தான் இப்படி இருக்காளோ? தப்பு மேல தப்பு பண்ணிக்கிட்டே இருக்கா அவளை மட்டும் கண்ட்ரோல் பண்ணவே முடியல என புலம்புகிறார். ராதிகா அப்படி தப்பா எழுதணும் பண்ண மாட்டாங்க அவங்க அவங்க பையனோட வெளியே போய் இருக்காங்க அவ்வளவுதானே என சப்போர்ட் செய்து பேசுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

அஜித் 64 : லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்..!

அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…

4 minutes ago

மங்காத்தா மற்றும் கோர்ட் படங்களில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? பிரேம்ஜியின் பதிலால் அதிரிய அரங்கம்..!

மங்காத்தா மற்றும் கோட் திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது என்று கேட்க பிரேம்ஜி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச…

19 minutes ago

சுந்தரவல்லி வீட்டுக்கு வந்த போலீஸ்காரர்கள்.. பயத்தில் நடுங்கிய ரஞ்சித், மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

50 minutes ago

விஜயா கேட்ட கேள்வி, வக்கீல் கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவிற்கு சந்தோஷமான விஷயம் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…

1 hour ago

Othaiyadi Video Song

https://youtu.be/xIuY5dk5Ug0?si=a9xZXKUGKeZv8lui

22 hours ago

Jilpanso Video

https://youtu.be/ljDYhKzWCO4?si=jaElqempCQraYPlU

22 hours ago