சுந்தரவல்லி வீட்டுக்கு வந்த போலீஸ்காரர்கள்.. பயத்தில் நடுங்கிய ரஞ்சித், மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா வாதியாருக்கு போன் போட்டு விசாரிக்க அவர் சுந்தரவல்லி நடந்து கொண்ட விஷயத்தை சூர்யாவிடம் சொல்லி விடுகிறார். நீங்க எனக்கு கொடுத்த பணத்தை நான் திருப்பி கொடுத்துவிடுகிறேன் இனிமேல் என்னால் வர முடியாது என்று சொல்ல இல்ல சார் வேண்டாம் என்று சொல்ல, அப்படி இல்லன்னா நந்தினி 2 அவர்ஸ்அனுப்பி வைங்க நான் சொல்லி கொடுத்து அனுப்புகிறேன் என்று சொன்னார் இல்ல சார் நான் இதைப்பற்றி முடிவு பண்ணிட்டு பேசுறேன் என்று சொல்லிவிட்டு நந்தினி இடம் இவ்வளவு நடந்து இருக்கு என்கிட்ட சொல்லல என்று திட்டிவிட்டு என்ன பண்றேன்னு பாரு என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுநாள் காலையில் நந்தினி வெளியில் பெருக்க வர அப்போது கோலம் பெயிண்டில் போட்டு இருப்பதை பார்த்துவிட்டு யோசித்துக் கொண்டிருக்க ஹரிதா நான் தான் போட்டேன் என்று சொல்ல, கோலமாவுல தான் போடணும் என்று சொல்ல அது என்னோட ஸ்லிப்பர்ல ஒட்டிக்கிட்டு அழுக்காவது இதுக்கு மேல இதுவே போதும் உள்ள போ என்று சொல்லி அனுப்ப சூர்யா கவனித்து விடுகிறார். கிச்சனுக்கு வந்தவுடன் கல்யாணத்திடம் பேசிக் கொண்டிருக்க சூர்யா வந்து நான் சொல்றத நீ செய்யணும் என்று சொல்லி கோலப்பொடிகளை கேட்க, கல்யாணம் எடுத்துக் கொடுக்க நான் சொல்ற இடத்திலெல்லாம் கோலத்தை போட்டு கலர் கொடுக்கணும் என்று சொல்லி கூப்பிட கல்யாணம் சந்தோஷப்படுகிறார். சூர்யா சுந்தரவல்லி வாசல் முன் பெருசாக கோலத்தை போடு என்று சொல்ல நந்தினி தயங்க சூர்யா கட்டாயப்படுத்தி போட சொல்ல நந்தினி போடுகிறார்.

நந்தினி அந்த இடத்தில் போட்டு முடித்த உடன் ஹரிதா ரூம் முன் போடச் சொல்ல, நந்தினி போட்டு முடிக்க, முடிந்ததா என்று கேட்க இன்னும் மேலலாம் யாரு போறது வா என்று சொல்ல முடிந்த உடன் கோபத்துடன் வந்த நந்தினி கல்யாணத்திடம் இவர் சின்ன விஷயத்தை பெருசு பண்ணிக்கிட்டே போறாரு என்று கோபப்படுகிறார். ரூமில் இருந்து வெளியில் வந்த சுந்தரவல்லி கோலத்தை பார்த்து கல்யாணத்தை கூப்பிட்டு யார் இப்படி பண்ணது என்று கேட்டுக் கொண்டிருக்க ஹரிதாவும் வந்து என்னோட ரூமுக்கு வெளியே இது மாதிரி கொட்டி வெச்சிருப்பாங்க என்று சொல்ல இது சூர்யா செஞ்ச வேலை தான் என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். இதை இப்படியே விடக்கூடாது வாங்க போய் கேட்கலாம் என்று சொல்லி இருவரும் மேலே செல்கின்றனர். மேலே வந்து பார்க்க அங்கும் கோலம் போட்டு இருப்பதை பார்த்து குடும்பத்தினர் அனைவரும் வந்து யார் இது மாதிரி பண்ணது என்று கேட்கின்றனர். சூர்யாவை கூப்பிட்டு சுந்தரவல்லி திட்ட, ஹரிதா அலங்கோலமா இருக்கு என்று சொல்ல மகாலட்சுமி வரும்னு பார்த்தா மூதேவி வந்து இருக்கு என்று சொல்லி கிண்டல் அடிக்கிறார். ஹரிதாவை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு சுந்தரவல்லி இதை பார்க்க உனக்கு அசிங்கமாக இல்லையா என்று கேட்கிறார்.

நந்தினி இந்த வீட்டுக்கு வந்ததுக்கப்புறம் தான் கோலம் போடுறதே பார்த்து இருக்கேன் என்று சொல்லுகிறார். நந்தினி அவ பாட்டுக்கு வெளியே கோலம் போட்டுக்கிட்டு இருந்தா அந்த இடத்துல பெயிண்ட்ல கோலம் போட்டு நந்தினி வெறுப்பேத்துறதுக்காக இப்படி பண்ணி இருக்கா என்று சொல்ல, ஹரிதா இதனாலும் உன் பொண்டாட்டிக்கு என்ன வந்தது என்று கேட்க, அந்த பெயிண்ட் கோலத்தை நீயே அழிக்கிற வரைக்கும் இப்படித்தான் டெய்லியும் வீட்ல கோலம் போடுவோம் என்று சொல்ல, தேவையில்லாம அவன் கிட்ட எதுக்கு பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்க அவன் சொன்னா கேக்க மாட்டான் இவர்களிடம் மனுஷன் பேசுவானா என்று சொல்லிவிட்டு சுந்தரவல்லி சென்று விடுகிறார். உடனே சூர்யா அதுதான் தாய்க்குலம் சொல்லி ஆச்சி இல்ல போய் செய்டி என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். கீழே வந்த சுந்தரவல்லி குடும்பத்தினரிடம் அதனாலதான் அவன்கிட்ட நாங்க பேசறது கிடையாது என்று சொன்னால் சாரி ஆன்ட்டி நான் ஒன்னு நினைச்சா அது ஒன்னு நடந்துருச்சு என்று சொல்லுகிறார் அந்த நேரம் பார்த்து அடித்தால் சரி விடுங்க நான் ரஞ்சித் கல்யாணத்துக்கு மும்பையில் இருந்து ஒரு இவன் மேனேஜ்மென்ட் வச்சிருக்கேன் அவங்களோட வீடியோ பார்க்கலாம் என்று சொல்லி டிவியில் போட்டு காட்ட, நந்தினி சூர்யாவை வெளியில் கிளாசுக்கு அழைத்து வர, ஹாலிலிருந்து டிவியை ஆஃப் பண்ணி விடுகிறார். கல்யாணத்திடம் நந்தினி இங்க படிக்கணும் சார் எடுத்துட்டு வா இப்போ ஓபன் ஆகிடும் என்ற டிவியை ஆன் செய்கிறார். நந்தினி சாரில் உட்கார்ந்தவுடன் டிவியில் இங்கிலீஷ் சார் வந்து பாடம் எடுக்க உங்களை யாரும் இனிமேல் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லுகிறார். இதனால் குடும்பத்தினர் கடுப்பாக இங்கிலீஷ் வாத்தியார் பாடத்தை ஆரம்பித்து விடலாமா என்று கேட்கிறார்.

jothika lakshu

Recent Posts

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’… செப்டம்பரில் ரிலீஸ்?

இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…

15 minutes ago

விம்பிள்டன் 2026: இந்திய பிரபலங்களின் ஸ்டைலான ஃபேஷன் அணிவகுப்பு!

உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…

27 minutes ago

Boomer Man Official Trailer

Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…

17 hours ago

Vel Sevvel Lyrical Video

Vel Sevvel Lyrical Video | Arulvaan | Arulnithi, Aarav | GV Prakash Kumar | Ganesh…

18 hours ago

ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள லெஹங்காவில் மின்னிய ஜான்வி கபூர்… வைரலாகும் புகைப்படங்கள்!

பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவரான ஜான்வி கபூர், தனது நடிப்பைத் தாண்டி ஸ்டைலிஷ் ஃபேஷன் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை…

1 day ago

வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28 பாகம் 3’ பணிகள் விறுவிறுப்பு!

தமிழ் சினிமாவில் நட்பு, நகைச்சுவை மற்றும் தெருமுனை கிரிக்கெட்டை அழகாக பதிவு செய்த படங்களில் முக்கியமானது இயக்குநர் வெங்கட் பிரபு…

1 day ago