Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாலினி சொன்ன வார்த்தை. அதிர்ச்சியில் பாக்கியா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாக்யாவிடம் செழியன் போனை கேட்டு கெஞ்ச அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார்.

பாக்கியா போனை ஆன் செய்ய மாலினி வரிசையாக அனுப்பிய மெசேஜ்களை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அது மட்டுமல்லாமல் மாலினி உடன் இருக்கும் போட்டோக்களை பார்த்து ஷாக்காகி விடுகிறார்.

உடனே மாலினி வீட்டிற்கு கிளம்பி வர சொல்ல பாக்கியா செழியன்  நாளைக்கு காலையில 9 மணிக்கு கோவிலில் சந்திக்கலாம் என மெசேஜ் செய்கிறார். அதை தொடர்ந்து பாக்யா கோவிலுக்கு வந்து மாலினியிடம் பேச மாலினி செழியன் தனக்கு கல்யாணம் ஆகி விட்டது என்பதை மறைத்து திருமணம் செய்து கொள்வதாக சொல்லி தன்னை ஏமாற்றி விட்டதாக நாடகம் போடுகிறார்.

பாக்கியா எதுவாக இருந்தாலும் செழியன் செய்தது தப்புதான், அவன் இனிமே உன் பக்கமே வரமாட்டான். அவனை என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் என்று பேசுகிறார். மாலினி ஒரு பெண்ணோட வாழ்க்கையை கெடுக்கிற அளவுக்கு நாம் மோசமானவ கிடையாது, ஆனால் செழியனை நான் மன்னிக்கவே மாட்டேன் என அங்கிருந்து கிளம்பி செல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshimi serial episode update
Baakiyalakshimi serial episode update