நிச்சயத்திற்கு வந்த கோபி. பாக்கியாவை திட்டிய ஈஸ்வரி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவுடன் மண்டபத்துக்கு வர செழியன் அவர்களை வரவேற்று வர்ஷினியின் அப்பாவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

அதன் பிறகு பாக்கியா எழிலின் ரூமுக்கு சென்று அவனிடம் பேச முயற்சி செய்ய அங்கு செழியன் இருக்க உடனே பாக்யா அவனிடம் பாட்டி உன்னை கூப்பிட்டதாக சொல்லி அனுப்பி விட்டு எழிலிடம் உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமா என கேட்க நான் நல்லாதான் இருக்கேன், என்னை யார் கட்டாயப்படுத்தி இப்படி பண்ண முடியும் என பேசிக்கொண்டு இருக்க உன் முகமே சரியில்லை, உண்மையை சொல்லு என பாக்கியா கேட்க அப்போது ஈஸ்வரி உள்ளே வந்து நெனச்சேன் நீ இப்படியெல்லாம் அவன்கிட்ட ஏதாவது பேசி குழம்புவனு நெனச்சேன் என திட்டி வெளியே கூட்டி செல்கிறார்.

அதன் பிறகு ஈஸ்வரியிடம் பாக்கியா அவனுக்கு எதுக்கு இவ்வளவு அவசர அவசரமா கல்யாணம் என கேட்க ஈஸ்வரி இல்லன்னா அவன் அந்த அமிர்தாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிற்பான் உனக்கு பரவாயில்லையா என கேட்கிறார்? நீ எதுவும் பேசக்கூடாது அவனுக்கு அம்மாவா மேடம் நின்னா மட்டும் போதும் என சொல்கிறார்.

இந்த பக்கம் எழில் வீட்டுக்கு வரும் அமிர்தா உள்ளே சென்று கதவைத் தட்டி பெல் அடித்து பார்க்க யாரும் இல்லாத காரணத்தினால் வெளியே வந்து அந்த பக்கம் வந்த பெண்மணியிடம் விசாரிக்க எல்லாரும் நிச்சயதார்த்தத்துக்கு போய் இருக்காங்க என சொல்கிறார். ஆனால் அது எழிலுக்கான நிச்சயதார்த்தம் என அமிர்தாவுக்கு தெரியாமல் இருக்கிறது. பிறகு அமிர்தா எல்லோரும் எந்த இடத்துக்கு போயிருக்காங்க என விசாரித்து வடபழனி முருகன் கோவில் பக்கத்தில் இருக்கும் திருமண மண்டபத்துக்கு கிளம்பி செல்கிறார்.

இந்த பக்கம் நிச்சயதார்த்தத்துக்கு எல்லாம் ஏற்பாடுகளும் நடந்து முடிந்து பிள்ளையோட அப்பா அம்மா மேல வாங்க என ஐயர் கூப்பிட அப்போது எல்லோரும் பாக்யாவை மேல வர சொல்ல கோபி ராதிகாவை மேலே வருமாறு கூப்பிடுகிறார். வர்ஷியின் அப்பாவும் அவங்க ரெண்டு பேரும் வந்தா ஜோடியா நிப்பாங்க என கோபிக்கு ஆதரவாக பேசுவது போல பதில் சொல்ல எழில் பாக்கியா தான் எங்க அம்மா என சொல்கிறார். ஏன் நீங்க தனியா நிக்கலையா என சொல்ல வர்ஷினி அப்பா நீங்க எதுவும் பேசாதீங்க என சொல்கிறார்.

பிறகு மீண்டும் பாக்கியாவை கூப்பிட கோபியும் ராதிகாவும் அசிங்கப்பட்டு நிற்கின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

ஜெயிலர் 2 குறித்து சூப்பர் தகவலை கொடுத்த நடிகர் யோகி பாபு

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம்…

2 hours ago

ஏகே 54 என்பது தான் இயங்க ரசிகர்களை பயன்படுத்தாத ஒரு பீரங்கி.. பார்த்திபன் பேச்சு.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…

2 hours ago

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அவர்தான்.. ரஜினிகாந்த் குறித்து பேசிய சுராஜ் வெஞ்சாரமூடு..!

ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

6 hours ago

ரஞ்சித் சொன்ன வார்த்தை, கடுப்பான சூர்யா, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

6 hours ago

பெண் வீட்டார் எடுத்த முடிவு.. சந்தோஷத்தில் மனோஜ் விஜயா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

9 hours ago

முதல் படம் அனுபவம் குறித்து நேர்காணலில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா.. யாரைப் பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…

1 day ago