கல்யாண ஏற்பாடுகளை செய்யும் குடும்பத்தினர், சுதாகர் கொடுத்த ஷாக் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகர் கேட்கும் கிப்ட்டை பாக்கியா கொடுப்பாரா இல்லையா என்பதை குறித்து பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் குடும்பத்தினர் அனைவரும் இனியாவின் கல்யாணம் பற்றிய உட்கார்ந்து பேசுகின்றனர் என்னென்ன செய்ய வேண்டும் எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதெல்லாம் பற்றி பேச கோபி என்கிட்ட தேவையான பணம் இருக்குமா நான் நாளைக்கு போய் எடுத்துக்கிட்டு வந்துடறேன் செலவெல்லாம் பார்த்துக்கலாம் என்று சொல்ல பாக்கியாவும் இனியாவுக்காக சேர்த்து வச்ச நக பணம் எல்லாமே இருக்கு அதுவே சரியா போயிடும் என்று சொல்லுகிறார் நானும் கொஞ்சம் பணம் சேர்த்து வச்சிருக்கேன் இனியவோட கல்யாணத்தை சிறப்பாக பண்ணிடலாம் என்று பாக்யா சொல்லுகிறார் ஈஸ்வரி மாப்பிள்ளை வீட்டில் கொஞ்சம் பெரிய இடமா இருக்காங்க அவங்க யோசிக்கிற அளவுக்கு இல்லாமல் எல்லாமே நல்லா பண்ணனும் கடன் வாங்கியாவது செய்யணும் என்று சொல்ல அதுக்கெல்லாம் அவசியம் வராதுமா என்று கோபி சொல்லுகிறார். சாப்பாடெல்லாம் அசத்திடனும் பாக்யா என்று சொல்ல மத்தவங்க கல்யாணத்துக்கு நான் சிறப்பா செய்யும் போது என் பொண்ணு கல்யாணத்துக்கு சும்மா விட்டுவேனா அதெல்லாம் நீங்க கவலைப்படாதீங்க அத்தை என்று சொல்லுகிறார்.

உடனே ஈஸ்வரி அண்ணனுக அமைதியாகவே இருக்கீங்க என்று கேட்க மூக்கு மேல விரல் வைக்கும் அளவுக்கு செய்வோம் பாட்டி என்று செழியன் சொல்ல அதற்கு எழில் நான் ஒன்னும் பழைய எழில் கிடையாது பாட்டி இனியா ஒரு ஆசையை நான் நிறைவேற்ற முடியும் என்று சொல்லுகிறார்.ஈஸ்வரி இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கணும் என வேண்டிக்கொள்கிறார்.

பாக்யா ரெஸ்டாரன்ட்டில் அனைவரையும் கூப்பிட்டு ஸ்வீட் மிச்சர் ரெடி ஆயிடுச்சா என்று கேட்க செல்வி வீட்டுக்கு எடுத்துட்டு போனோமா இல்ல நேரம் மண்டபத்துக்கா என்று கேட்கிறார் மண்டபத்துக்கு தான் என்று சொல்லுகிறார் உடனே எல்லாரும் கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடனும் என்று சொல்ல நாங்க வராமயா அக்கா என்று சொல்லும்போது செல்வியின் முகம் மாறுவதை பாக்யா கவனிக்கிறார். ரெஸ்டாரண்டுக்கு எத்தனை நாள் லீவு என்று கேட்க எத்தனை நாளோ இல்ல ஒரே நாள் மட்டும் தான் இன்னிக்கு ஈவினிங் மூடிட்டு நாளைக்கு மறுநாள் துறக்கிறோம் அவ்வளவுதான் என்று சொல்லுகிறார் ரெண்டு மூணு நாள் நீங்களா இல்லையா என்று கேட்க பிசினஸ் முக்கியம்தான் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். உடனே தனியாக சென்று செல்வியிடம் என் பொண்ணு வாழ்க்கையில் முடிவெடுக்கிற உரிமை எனக்கு இருக்கணும்னு நினைச்சேன் ஆனா என்ன தவிர மீதி எல்லாரும் முடிவெடுத்துட்டாங்க செல்வி நீ கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு வருவல்ல வரணும் என்று சொல்ல நான் எப்படிப்பா வர்றது அங்க யாருக்கும் என்ன பிடிக்காது நல்ல விஷயம் நடக்கும் போது எதுக்கு என்று சொல்ல மனசு அளவுல என் பொண்ணுக்கு சாபம் கொடுத்துறாத செல்வி என்று சொல்ல என் பையனை அடிச்சு போட்டா அப்பவே எனக்கு இனியா பாப்பா மேல கோவம் இல்லை அக்கா. இப்ப மட்டும் எப்படி வரும் என்று கேட்கிறார்.

இல்ல செல்வி நீ கண்டிப்பா கல்யாணத்துக்கு வரணும் என்று பேசிக் கொண்டிருப்ப சுதாகர் வருகிறார் அவரை வரவேற்று பாக்கியா உட்கார வைக்க, நாளைக்கு கல்யாணம் இன்னைக்கு ரெஸ்டாரன்ட் லீவு விட்டு இருப்பீங்கன்னு நினைச்சேன் என்று கேட்கிறார். பிசினஸும் முக்கியமாக என்று சொல்ல சரி வாங்க உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்று சொல்லுகிறார் இன்னைக்கு ஈவினிங் பசங்களுக்கு ரிசப்ஷன் எங்க வீட்டுக்கு வந்து இருக்கிறவங்க வரதட்சணை இல்ல ஏதோ கம்மியா இருக்கிறது தான் ஃபீல் பண்றாங்க என்று சொல்ல சுத்தி வளைச்சு பேசாதீங்க என்ன கேட்கணுமோ கேளுங்க என்று சொன்னால் பாக்யா இது மட்டும் இல்லாம எங்க வீட்ல நாங்க எல்லாரோட காசையும் சேவிங் செய்யும் எடுத்து தான் இனியா கல்யாணத்தை சிறப்பா செய்றோம். எங்க நிலைமைக்கு அதிகமாக இனியாவுக்கு செய்ய நினைக்கிறோம் இனியாவோட அப்பா கார் வாங்குவதை பற்றி சொல்லி இருக்காரு என்றெல்லாம் பேச அதற்கு தராசு கொஞ்சம் இப்படி அப்படி இருக்கிறதனால ஒரு விஷயம் செஞ்சா மட்டும் சரியாயிடும் என்று சொல்லி உங்களுடன் ரெஸ்டாரன்டை இனியாவுக்கு கொடுத்துடுங்க என்று சொல்ல பாக்யா அதிர்ச்சி அடைகிறார் வரதட்சணையாக கேட்க விருப்பம் இல்ல கிப்ட்டா கொடுத்துடுங்க என்று சொல்ல பாக்யா முடியாது சார் என்று சொல்லுகிறார் முதல்ல என்னோட ரெஸ்டாரன்ட் கேட்க வந்தீங்க நான் கொடுக்க முடியாதுன்னு சொன்ன உடனே எங்க வீட்டுக்கு பொண்ணு கேட்டு வந்தீங்க அப்ப இதற்குத்தானா என்று கேட்க ஒரு ரெஸ்டாரண்டுக்காக எல்லாம் என் பையன் வாழ்க்கைய விற்ற மாட்டேன் என்று சொல்லுகிறார்.

நீங்க என்ன சொன்னாலும் நான் என்னோட ரெஸ்டாரன்ட் கொடுக்க மாட்டேன் உங்க பொண்ணுக்காக கூடவா என்று கேட்டேன் இது நான் கஷ்டப்பட்டு உருவாக்கின ரெஸ்டாரன்ட் யாருக்காகவும் தரமாட்டேன் என்று சொல்ல என்ன நடந்தாலும் தர மாட்டீங்களா என்று கேட்க என்ன கல்யாணத்தை நிறுத்திடுவீங்களா கல்யாணமே நின்னாலும் தரமாட்டேன் என்று சொல்லுகிறார் அதற்கு சுதாகர் என சொல்லுகிறார்? பாக்யாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial episode update 09-04-25
jothika lakshu

Recent Posts

Asku Macha Lyrical Video

Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…

1 day ago

Bloody Politics Official Teaser

Bloody Politics Official Teaser | Gautham Ram Karthik | Anchana Nethrun | Dhina Raghavan |…

1 day ago

PAAVAI Official Trailer

PAAVAI Official Trailer | Rahul Vignesh | Mullai | Niranjana | Senduran | Anosh

1 day ago

DHEIVAA Taster

DHEIVAA Taster - Refire with Uyiri | Shanthakumar Chandramohan | Bala Subramaniam | Dheena Dhayalan

1 day ago

Centimeter Lyric Video

Centimeter Lyric Video | XY | C.V. Kumar | Srikant Krishna | Sreekanth Hariharan |…

1 day ago

Kalla Nikkiriye Lyric Video

Kalla Nikkiriye Lyric Video | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind Vasantha…

1 day ago