Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மெகா சங்கமத்தில் இணையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி.. வைரலாகும் தகவல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல்களும் இன்று முதல் மெகா சங்கத்தில் இணைந்துள்ளன.

இன்றைய எபிசோடில் பாக்கியாவின் குடும்பத்தினர் திருச்செந்தூருக்கு செய்வதற்காக கிளம்புகின்றனர். அதேபோல் பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் குடும்பத்தில் அவருடைய மனைவி கதிர் மற்றும் மீனா ஆகியோர் திருச்செந்தூர் கோவிலுக்கு கிளம்பி வருகின்றனர்.

எழில் அமிர்தாவுக்கு கணேஷால் திரும்பவும் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று சொல்லி பாக்கியா அவர்களை தன்னுடன் அழைத்து வருகிறார். வழக்கம் போல ஈஸ்வரி இந்த சூழ்நிலையில் இதெல்லாம் தேவையா கொஞ்சம் யோசிக்கலாம் என்று சொல்க எல்லோரும் அம்மா போயிட்டு வரட்டும் என பாக்யாவுக்கு சப்போர்ட்டாக பேசி அனுப்பி வைக்கின்றனர்.

இங்கே பாண்டியன் ஸ்டோரில் சக்திவேலின் அம்மா தனது மகன் குடும்பமும் மகள் குடும்பமும் தனித்தனியாக பிரிந்து கிடப்பதை நினைத்து கண்கலங்கி அழுகிறார். இந்த குடும்பம் ஒன்று சேர்ந்து ராதா என

Baakiyalakshimi and Pandian stores mega sangamam
Baakiyalakshimi and Pandian stores mega sangamam

கேட்க அவரது மகன் அதுக்கு வாய்ப்பே இல்லை என அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதன் பிறகு பாண்டியன் குடும்பமும் பாக்யா குடும்பமும் திருச்செந்தூர் வர கதிர் ஆகியோர் ரோடை கிராஸ் செய்யும்போது பாக்கியா வந்து கொண்டிருந்தேன் இவர்கள் மீது ஓதுவது போல் வந்து நிற்க அதில் டிரைவருடன் சண்டை போட எழில் கீழே இறங்கி சாரி கேட்க இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

பிறகு பாக்கிய வந்து மன்னிப்பு கேட்டு பிரச்சினையை தீர்த்து வைக்கிறார். அதன் பிறகு ஹோட்டலுக்கு வர அங்கும் இரண்டு குடும்பமும் சந்தித்துக் கொள்ள கதிரும் எழிலும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்துக் கொள்கின்றனர். ‌ இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் எபிசோட் முடிவடைகிறது.