நடிகர் முரளியின் மகனான அதர்வா பானா காத்தாடி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சண்டிவீரன், பரதேசி, இமைக்கா நொடிகள், குருதி ஆட்டம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவரது நடிப்பில் தனல் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது அவர் திருமணம் குறித்து ஜாலியாக பேசி உள்ளார்.
விஷால் ஒரு முறை அதர்வா தான் பேச்சுலராக இருக்கிறார் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பேசி இருந்ததற்கு பதிலளிக்குமாறு அதர்வா பேசி உள்ளார்.
அதாவது முதலில் விஷால் சார் எப்போ திருமணம் செய்கிறாரோ எப்போ தாலி கட்டுறாரோ அதற்குப் பிறகுதான் நான் தாலி கட்டுவேன் என ஜாலியாக பேசியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


