இரவில் தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பார்க்கலாம்.
இரவில் தூங்குவதற்கு முன் சிலர் தயிர் சாப்பிடுவார்கள். ஆனால் அது நம் உடலுக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடும். அது குறித்து பார்க்கலாம்.
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான செரிமான கோளாறு வர முக்கிய காரணமாக இருக்கும். ஏனெனில் இதில் கொழுப்பு மற்றும் புரதம் அதிக அளவில் இருப்பதால் ஜீரணம் ஆவதில் சிரமம் ஏற்படுகிறது.
இது மட்டுமில்லாமல் சளி, மூக்கடைப்பு, இருமல் பிரச்சனை உண்டாக்கி விடும். குறிப்பாக ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் இரவில் தயிர் சாப்பிடுவதை தவிர்ப்பது சிறந்தது. மேலும் சிலருக்கு தயிர் சாப்பிட்டால் அலர்ஜி பிரச்சனைகளும் வரக்கூடும்.
இருப்பினும் தயிர் சாப்பிடுவதனால் நமக்கு சில நன்மைகளும் கிடைக்கிறது அது என்னவென்றால் முகத்தின் பொலிவிற்கும் உடலுக்கு தேவையான நீர் சத்து கிடைப்பதற்கும் உதவுகிறது. குறிப்பாக மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாக இருக்கும்.
எனவே தயிரில் இருக்கும் நன்மை மற்றும் தீமைகளை அறிந்து உடலுக்கு ஏற்றவாறு சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

