ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அர்ஜுன் தாஸ் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்துக் கொண்டு சென்னையில் தன் நண்பர்களுடன் வசித்து வருகிறார். அடிக்கடி கோபம் வரும் சுபாவம் கொண்ட இவர் அந்த கோபத்தை வெளிக்காட்டாமல் அந்த நபரைக் கொல்வது போன்றும் அடிப்பது போன்றும் தன்னுள்ளே நினைத்து அடக்கிக் கொள்கிறார். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் துஷாரா விஜயன் ஒரு வீட்டில் ஒரு பாட்டியை கவனித்து கொண்டு வேலை பார்த்து வருகிறார். ஒரு நாள் அர்ஜுன் தாஸ் அந்த வீட்டிற்கு உணவு டெலிவரிக்காக போகும் போது துஷாரா விஜயனை பார்த்து காதல் வயப்படுகிறார். இதிலிருந்து அந்த வீட்டிற்கு யார் உணவு டெலிவரிக்காக சென்றாலும் அதை வாங்கி இவர் டெலிவரி செய்து தன் காதலை வளர்க்கிறார்.

இப்படி இவர் காதல் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் செல்கிறது. ஒரு கட்டத்தில் துஷாரா விஜயன் கவனித்து வரும் பாட்டி இறந்துவிடுகிறார். துஷாரா விஜயன் மட்டும்தான் அந்த வீட்டில் இருந்து அவரை கவனித்து வருவதால் எல்லோருக்கும் இவர் மீது சந்தேகம் திரும்புகிறது. இறுதியில் பாட்டியை கொன்றது யார்? துஷாரா விஜயனும், அர்ஜுன் தாஸும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை. கதாநாயகனான அர்ஜுன் தாஸ் தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். அவரது குரலும், தோற்றமும் கதாபாத்திரத்திற்கு நன்றாக பொருந்தியுள்ளது. எமோஷன், கோபம் என அனைத்திலும் தேவையான நடிப்பை கொடுத்து கவர்ந்திருக்கிறார்.

அப்பாவாக வரும் காளிவெங்கட் சிறிது நேரம் திரையில் தோன்றினாலும் மனதில் நிற்கும் அளவிற்கு நடித்துள்ளார். அவரின் ஒவ்வொரு செயலும் ஒவ்வொருவரின் அப்பாவையும் நியாபகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தன் தேர்ந்த நடிப்பால் பாராட்டை பெறுகிறார். கதாநாயகியான துஷாரா விஜயன் தனக்கான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். பாட்டியின் மகளாக வரும் வனிதா விஜயகுமார் திமிரான நடிப்பால் அசத்தியுள்ளார். இந்த காலக்கட்டத்தில் மக்கள் அதிகம் சமாளிக்கும் மன அழுத்தத்தை மையமாக வைத்து கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் வசந்த பாலன்.

திரைக்கதையின் முதல் பாதியில் தொய்வு இருந்தாலும் இரண்டாம் பாதி விறுவிறுப்பை கூட்டியுள்ளது. திரைக்கதையுடன் நம்மையும் ஒன்றிவிட வைக்கிறது. அடுத்து என்ன என்ற கேள்வி படம் முழுக்க நம்முடன் பயணித்து நமது ஆர்வத்திற்கு தீணிபோடுகிறது. ஜி.வி.பிரகாஷ் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ஏ.எம்.எட்வின் சாகே ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. மொத்தத்தில் அநீதி – பிரகாசம்

aneethi movie review
jothika lakshu

Recent Posts

தலைமைத்துவமான பண்பு அஜித்திடம் உள்ளது.. நடிகர் சரத்குமார் ஓபன் டாக்..!

கூட்டத்தை கட்டுப்படுத்த அஜித்திடம் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

3 hours ago

ஜனநாயகன் குறித்த கேள்வி சசிகுமார் கொடுத்த பதில்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு சசிகுமார் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…

3 hours ago

அருண் எடுத்த முடிவு, அண்ணாமலை கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண்…

3 hours ago

சுந்தரவல்லி குடும்பத்தை பழிவாங்க நினைக்கும் பரமு, சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

20 hours ago

சிறுத்தை சிவா அஜித் கூட்டணியில் புதிய படம் உருவாகுமா? வெளியான சூப்பர் தகவல்.!!

அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…

20 hours ago

சென்சார் பிரச்சனையில் சிக்கியுள்ள ஜனநாயகன்.. தொடர்ந்து ரிலீசில் வரும் சிக்கல், வெளியான லேட்டஸ்ட் தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…

24 hours ago