தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த படம் முடித்த கையோடு அஜித் தொடர்ந்து கார் ரேசில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் இந்த படத்தை இயக்கிய ஆதிக் அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது இந்த நிலையில் நடிகை ஶ்ரீ லீலா அஜித் குறித்து பேசி உள்ளார்.
அதாவது நான் ஏகே வின் வெறித்தனமான ஃபேன் என்றும் அவர் அற்புதமான மனிதர் எனக்கும் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் உண்டு என பேசி இருக்கிறார் இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள பராசக்தி படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


