தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் கல்கத்தாவை சேர்ந்தவர். இருப்பினும் தமிழ் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் தமிழில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார். இவரின் முதல் படத்தின் மூலம் ரசிகர்களிடம் ஓரளவு பிரபலமான இவர் இதனை தொடர்ந்து பாயும் புலி, ஆறாது சினம் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதையடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ்2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன் மூலம் ஐஸ்வர்யா தத்தாவின் துணிச்சலான பேச்சும் நடவடிக்கைகளும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் ஒரு சில படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
இருப்பினும் அவ்வப்போது சோசியல் மீடியாவில் விதவிதமான கவர்ச்சி உடைகளில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதேபோல் தற்போது வெள்ளை நிற ஆடையில் சேர் மீது அமர்ந்து கொண்டும் சுவற்றில் சாய்ந்து நின்றும் வித்தியாசமான பல போஸ்களை கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்து வருகிறது.
???????????????? pic.twitter.com/94beJJEYYb
— Aishwarya dutta (@Aishwaryadutta6) August 25, 2022

