after-11-year-3-movie-released
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் தனுஷின் முன்னாள் மனைவியும் ஆன ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்த திரைப்படம் தான் 3. இதில் தனுஷ் உடன் இணைந்து ஸ்ருதிஹாசன், பிரபு, பானுப்பிரியா, சிவகார்த்திகேயன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படத்தை தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா தயாரிக்க அனிருத் இசையமைத்து இப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தனுஷ் எழுதி அனிருத் இசை அமைத்திருந்த ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் ஹிட்டானது. அதனால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 2011 ஆம் ஆண்டு இப்படம் ரிலீஸ் ஆனது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு தமிழில் வெற்றி பெறாமல் கலவையான விமர்சனங்களை மற்றும் பெற்றிருந்தது.
இந்நிலையில் திடீரென்று இப்படத்தை 11 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆனா இப்படம் ஆந்திராவில் தெலுங்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதனால் 3படத்தின் 200-க்கும் மேற்பட்ட காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆகி ஓடி உள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் மிகுந்த உற்சாகத்தில் தனுஷ் இருக்கிறாராம். ஏனெனில் அவர் தெலுங்கில் முதன்முறையாக நடித்துள்ள “வாத்தி” திரைப்படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. 11 வருடங்களுக்கு முன்பு நடித்திருந்த 3 படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் வாத்தி திரைப்படத்திற்கு இதைவிட டபுள் மடங்கு வரவேற்பு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் தனுஷ் இருக்கிறாராம். இந்த சூப்பரான தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…
சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…