Actress Pratyusha suicide case: Supreme Court makes sensational verdict
நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தமிழில், மனுநீதி, தவசி, சவுண்ட் பார்ட்டி உள்பட சில படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகை பிரதியுஷா. இவர், சித்தார்த்தா ரெட்டி என்பவரைக் காதலித்து வந்தார். கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 23-ந்தேதி இருவரும் விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மறுநாள் பிரதியுஷா மரணமடைந்தார். சித்தார்த்தா ரெட்டி உயிர் பிழைத்தார். அவர்கள் அருந்திய குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி கலந்திருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
பிரதியுஷாவின் தாய் சரோஜினி தேவி, இது வெறும் தற்கொலை அல்ல; கூட்டுப் பாலியல் வன்கொடுமை என்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் இதற்குப் பின்னால் இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்தச் சம்பவத்தில் பிரதியுஷாவை தற்கொலைக்குத் தூண்டியதாக சித்தார்த் ரெட்டி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கை விசாரித்த சிபிஐ, சித்தார்த்தா ரெட்டி மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
அதனடிப்படையில், கடந்த 2004-ம் ஆண்டில் சித்தார்த் ரெட்டிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையை ஹைதராபாத் முதன்மை அமர்வு நீதிமன்றம் விதித்தது. இத்தண்டனையை, 2011-ம் ஆண்டு உயர்நீதிமன்றம் 2 ஆண்டுகளாகக் குறைத்ததுடன் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சித்தார்த் ரெட்டியும் பிரதியுஷாவின் தாயார் சரோஜினி தேவியும் 2012-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.14 ஆண்டு விசாரணைக்குப் பிறகு உயர் நீதிமன்றத் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அதன்படி சித்தார்த் ரெட்டி 4 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்றும், தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள அபராதத்தைச் செலுத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராஜேஷ் பிண்டால் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
திரையுலகில் திருமணத்திற்குப் பிறகும், தாயான பிறகும் தனது நட்சத்திர அந்தஸ்தை அசைக்காமல் தக்கவைத்திருக்கும் நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் நயன்தாரா. குடும்ப…
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.…
ஜெயராம் மற்றும் ஊர்வசி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படமான ‘பரிமளா அண்ட் கோ’, வரும் ஜூன் 5-ஆம்…
இயக்குநர் ராம் இயக்கத்தில் 2007-ஆம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ திரைப்படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கல்ட் கிளாசிக்…
‘நாடோடிகள்’ புகழ் அபிநயா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படம் ‘இரட்டையர்’. அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கியுள்ள இந்த…
இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா…