Actress nayanthara meet mother
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கடந்த ஜூன் 9ஆம் தேதி ஏழு வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.
நண்பர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு தன்னையே அழைக்கவில்லை என அவருடைய பெரியம்மா வருத்தத்தோடு பேசிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் நயன்தாராவின் தாயார் கூட இந்த திருமணத்தில் பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே திருமணம் முடிந்த சில நாட்களில் இருவரும் கேரளா சென்று நயன்தாராவின் அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கியுள்ளனர்.
நயன்தாராவின் தாயார் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த திருமணத்தில் பங்கேற்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் சொந்த ஊருக்குச் சென்று நயன்தாரா தாயாரிடம் ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். மேலும் ஓரிரு நாட்கள் தாயாருடன் தங்கிவிட்டு அவர் சென்னை திரும்புவார் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…
மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…