அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து புத்தகம்,ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, ஆறாது சினம், தர்மதுரை, வடசென்னை, கானா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களின் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதாவது சினிமாவில் வாய்ப்பு தேடி ஆரம்பத்தில் ஒரு தயாரிப்பாளர் இடம் கேட்டபோது அதற்கு அவர் என்னை கிளாமர் உடையில் வரச் சொன்னதாகவும் அதன் பிறகு தான் முடிவு எடுக்கப் போவதாகவும் சொல்லி இருந்ததாக கூறியிருக்கிறார்.
இது மட்டுமில்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு பிரபல தயாரிப்பாளரின் மகனுக்கும் திருமணம் என்ற தகவலும் வதந்தி எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


