Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“என் மகள் மிகவும் அன்பானவள் தைரியமானவள்”: கண்ணீர் வர வைக்கும் விஜய் ஆண்டனியின் உருக்கமான அறிக்கை

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பயணத்தை தொடங்கி இருக்கிறது பிச்சைக்காரன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகி தற்போது பன்முக திறமை கொண்டவராக வளம் வருபவர் விஜய் ஆண்டனி.

இவரது மூத்த மகளான மீரா பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் மன அழுத்தம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் பேரதிர்ச்சி ஏற்படுத்தியது.

பிரபலங்கள் பலரும் விஜய் ஆண்டனி வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்து வந்தனர். தனது மகளின் இறப்பு குறித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.

அந்த அறிக்கையில்அன்பு நெஞ்ஜங்களே,என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது, இந்த உலகை விட சிறந்தஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் சென்று இருக்கிறாள்.என்னிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறாள்.அவளுடன் நானும் இறந்து விட்டேன்.நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன்.

அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள் என தெரிவித்துள்ளார்.