actor suriya play cameo roll in rajinikanth 170 movie
இந்திய திரை உலகில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல மொழி உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடிகர் ரஜினி அவருக்கான படப்பிடிப்பை முடித்து விட்டதாக அண்மையில் தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கும் ரஜினிகாந்த் அதன் பிறகு ஞானவேல் இயக்கத்தில் “தலைவர் 170” எனப்படும் திரைப்படத்தில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கும் இப்படம் தொடர்பான அதிகாரவபூர்வமான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், இப்படத்தில் 15 நிமிடங்கள் இடம்பெறக்கூடிய காட்சியில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பயங்கரமாக உற்சாகப்படுத்தி வருகிறது. ஏற்கனவே கமலின் விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்திருந்த சூர்யா இப்படத்திலும் இணைய இருப்பதால் இப்படம் எப்படி இருக்க போகும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…