கொட்டுக்காளி படம் குறித்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார் சூரி.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து இன்று ஹீரோவாகி கலக்கிக் கொண்டிருப்பவர் சூரி. இவர் நடிப்பில் வெளியான கருடன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
அந்த வகையில் அடுத்ததாக இவரது நடிப்பில் வெளியாக போகும் படம் கொட்டுக்காளி. இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் இந்த படம் உருவாகி உள்ளது.
இந்தப் படத்தைப் பற்றி சூரி நெகிழ்வான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதில் என்னுடைய முந்தைய படங்களான விடுதலை கருடனில் இருந்து முற்றிலும் வேறுபட்ட படமாக இருக்கும் இது மட்டும் இல்லாமல் உண்மைக்கு மிக நெருக்கமான படம்.
இந்த சமூகம் சொல்லிக் கொடுத்த உறவுமுறைகளையும், நம்பிக்கைகளையும் பெரிதும் நம்புகிற ஒரு கதாபாத்திரம் தான் பாண்டி.இந்த படத்தில் வரும் பயணத்தில் இந்த சமூக உருவாக்கின பாண்டிக்குள் பாண்டி என்கிற தனிப்பட்ட ஒருவனுக்கும் நடக்கிற மனப்போராட்டத்தை சரியா பிரதிபலிக்கும்னு ரொம்ப கவனமா இருந்தேன்.அதை சரியா பண்ணி இருக்கேன்னு நம்புறேன்.நீங்க அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படமாக பொட்டுக்காளி நிச்சயம் இருக்கும்.
சூரியின் இந்த பதிவு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இந்த பதிவு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
என்னுடைய முந்தைய படங்களான விடுதலை, கருடனிலிருந்து முற்றிலும் வேறுப்பட்ட திரைப்படமாக #கொட்டுக்காளி இருக்கும். இது ஒரு Mainstream Content Oriented திரைப்படம். உண்மைக்கு மிக நெருக்கமான படம். இதில் வரும் என்னுடைய #பாண்டி என்கிற கதாபாத்திரம் எல்லா குடும்பங்ளிலும் இருக்கும் ஒருவன்… pic.twitter.com/UhjbAFmxxs
— Actor Soori (@sooriofficial) August 4, 2024

