நடிகர் ரோபோ சங்கர் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். வெள்ளித்திரையில் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,யாருடா மகேஷ், வாயை மூடி பேசவும், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ,மாரி ,புலி, சாகசம் போன்ற பல படங்களில் தன் காமெடி திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார்.
சமீபத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் இருந்து மீண்டு வந்து கம்பேக் கொடுத்திருந்தார். தொடர்ந்து படங்களில் கமிட்டாகி அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் திடீரென படப்பிடிப்பில் மயங்கி விழுந்ததாக தீவிர சிகிச்சை விரைவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரின் மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Actor Robo Shankar passed away