Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆண் பெண் இருவருமே சுதந்திரமான வாழ்க்கையே வாழ விரும்புகிறார்கள்.. நடிகர் பார்த்திபன்.!!

actor parthiban latest speech viral

நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார்

இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர் புதிய பாதை,உள்ளே வெளியே, ஹவுஸ் ஃபுல் ,இவன், குடைக்குள் மழை ,விந்தகன், ஒத்த செருப்பு, கதை திரைக்கதை வசனம் இயக்கம் போன்ற படங்களை இயக்கிய நடித்துள்ளார்.

தொடர்ந்து படங்களில் பிசியாக இருந்து வரும் பார்த்திபன் சுதந்திரத்தை விரும்பும் தலைமுறை குறித்து கூறியுள்ளார். அதாவது நான் சீதாவை பிரிந்ததை நினைத்து வருத்தப்படவே இல்லை சொல்லப்போனால் ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

இது மட்டுமில்லாமல் சீதாவுடன் வாழ்ந்த அடுத்த 12 வருடங்கள் என் வாழ்க்கையில் மிகவும் இனிமையானவை இந்த காலத்தில் பெண், ஆண் இருபாலரும் திருமணத்தை விட சுதந்திரத்தை பெரிதாக நினைக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் இது மட்டுமில்லாமல் எந்த பெண்ணும் திருமணம் என்ற பெயரில் ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையை வாழ விரும்பவில்லை அனைவருமே சுதந்திரமாக வாழ்க்கையே வாழ விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor parthiban latest speech viral