தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சிகளில் நடுவராக தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தாடி பாலாஜி. சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் அமையாததால் சின்னத்திரை பக்கம் சென்று செட்டில் ஆகிவிட்டார்.
ஏற்கனவே இவர் ஒரு திருமணம் செய்து விவாகரத்து ஆன நிலையில் இரண்டாவதாக நித்தியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு போஷிகா என்ற மகளும் உள்ளார். இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களம் இறங்கி அவர்களை சேர்த்து வைக்க விஜய் டிவி முடிவு செய்தது. நிகழ்ச்சியின் இறுதியில் இருவரும் சேர்ந்து விட்டது போல காட்டப்பட்டாலும் தற்போது வரை பிரிந்து தான் வாழ்ந்து வருகின்றனர்.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாலாஜி தனது மகள் பற்றி பேச அதற்கு எச்சரிக்கை விடுத்து பதில் வீடியோவை வெளியிட்டிருந்தார் நித்தியா. இந்த நிலையில் பாலாஜி தன்னுடைய மனைவியின் பிடியில் இருந்து மகளை காப்பாற்றி என்னிடம் ஒப்படைக்குமாறு குழந்தைகள் நல காப்பகத்தில் புகார் அளித்திருந்தார். மகளை வைத்து தன்னை மிரட்டி தன்னிடம் பணம் பறிப்பதாக கூறியிருந்தார். இப்படியான நிலையில் இதற்கு நித்யா பதிலளித்துள்ளார்.
என்னுடைய தரப்பில் ஒரு நியாயம் இருக்கிறது அதை நீதிமன்றம் முடிவு செய்து கொள்ளட்டும். மீடியா முன்பு பேசுவதால் எனக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை என கூறியுள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது கமல்ஹாசன் அளித்த அறிவுரைகள் குறித்து கேட்டதற்கு வேண்டாம் என பேச வைக்காதீங்க என் வாழ்க்கையில் கமலை மாதிரி ஒரு மோசமான கேரக்டரை பார்த்தது கிடையாது என கூறியுள்ளார்.
தாடி பாலாஜி மனைவி நித்யா உலக நாயகன் கமல்ஹாசன் குறித்து இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


