Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் தான் பல சவால்களைக் கடந்து வந்துள்ளேன்.. அஜித்.!!

actor ajith latest speech update

நான் சினிமாவுக்கு வந்த புதுசுல என் பேர மாத்திக்க சொன்னாங்க என்று கூறினார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

இந்த நிலையில் தற்போதைய இவரது நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய ஹிட் கொடுத்த மங்காத்தா திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

தற்போது அஜித் தொடர்ந்து கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி செலுத்தி வரும் நிலையில் அஜித் பேசிய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதில், நான் சினிமாவில் வந்த போது சிலர் என் பெயரை மாத்திக்கன்னு சொன்னாங்க ஆனால் வேற எந்த பேரும் வேணான்னு உறுதியா சொல்லிட்டேன். இது மட்டும் இல்லாம எனக்கு முதல்ல சரியா தமிழ் பேச வராது ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சு தான் அதை சரி பண்ணேன். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் தான் நான் பல சவால்களை கடந்து வந்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.

இவரின் இந்த பேட்டி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor ajith latest speech update