Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நயன்தாரா வாயால் ‘அந்த வார்த்தை’யை கேட்டதும் மயங்கி விழுந்த பிரபல இயக்குநர்

A famous director fainted after hearing 'that word' from Nayanthara's mouth.

நயன்தாரா வாயால் ‘அந்த வார்த்தை’யை கேட்டதும் மயங்கி விழுந்த பிரபல இயக்குநர்

தெலுங்கு திரையில் ‘பகவந்த் கேசரி’ படத்தை இயக்கிய அனில் ரவிபுடி தற்போது ‘மன வரசங்கரபிரசாத் காரு’ பட ரிலீஸ் வேலையில் உள்ளார். சிரஞ்சீவி, நயன்தாரா மீண்டும் ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் வெங்கடேஷ்.

சங்கராந்தி ஸ்பெஷலாக ஜனவரி 12-ந்தேதி வரும் இப்படத்தை விளம்பரம் செய்து வருகிறார்கள். படங்களில் நடிப்பதோடு சரி, அதன் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டார் நயன்தாரா. ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும்போதே நான் ப்ரொமோஷன்களுக்கு வர மாட்டேன் சார் என சொல்லிவிடுவார் நயன்தாரா. அது அனில் ரவிபுடிக்கும் தெரியும்.

இந்நிலையில், மன சங்கரவரபிரசாத் காரு படத்தின் வேலையை துவங்கும்போது, நல்ல ப்ரொமோஷன் வீடியோ எடுத்தீங்க அனில், இப்போது படம் முடிந்துவிட்டது, ஏதும் ப்ரொமோஷன் இல்லையா? என கேட்டார் நயன்தாரா.

‘நயன்தாராவே வந்து ப்ரொமோஷனுக்கு வருகிறேன் என்கிறாரே. இது நிஜமா இல்லை கனவா’ என அப்படியே மயங்கி விழ அங்கிருந்தவர்கள் அனில் ரவிபுடியை தாங்கிப் பிடித்துவிட்டார்கள்.

மயக்கம் தெளிந்த உடன், அய்யோ என்னால் நம்ப முடியவில்லை. அவரே கேட்டுவிட்டார். அதுவும் ப்ரொமோஷன்ஸ்னு சொல்லிவிட்டார்’ என சொல்லி தன் கையை கிள்ளிப் பார்த்தார் அனில் ரவிபுடி. கிள்ளிப் பார்த்த பிறகே இது கனவல்ல நிஜம் என்பது அவருக்கு தெரிய வந்தது.

நீங்க வந்தாலே அதுவே பெரிய ப்ரொமோஷன். ஜனவரி 12-ந்தேதி படம் ரிலீஸ்னு சொன்னாலே போதும் மேடம் என்றார் அனில். அதன்படி ‘மன சங்கரவரபிரசாத் காரு’ படம் ஜனவரி 12-ந்தேதி வருகிறது என்று சொல்லிவிட்டு கேமராவை கொஞ்சம் நகர்த்துமாறு கூறினார் நயன்தாரா.

A famous director fainted after hearing 'that word' from Nayanthara's mouth.
A famous director fainted after hearing ‘that word’ from Nayanthara’s mouth.