நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அடித்தட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது அறக்கட்டளையின் மூலம் உதவி வருகிறார். தனது அறக்கட்டளையின் மூலம் ஏழை மக்களுக்கு நேற்று மும்பையில் அவர் உணவு வழங்கினார்.
இது குறித்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கூறியிருப்பதாவது: “பசித்தவர்களுக்கு உணவளிப்பதன் மூலம் அமைதி தொடங்குகிறது என்று அன்னை தெரசா கூறினார். அதன்படி இந்த கடினமான காலத்தில் ஏழை மக்களுக்கு உதவி செய்வதை நான் கவுரமாக கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
Mother Teresa once said, "Peace begins when the hungry are fed."
I was truly humbled and inspired to visit Mumbai @rotibankFdn today, which is run by former Mumbai police commissioner Mr. D Sivanandan. Roti Bank has prepared and distributed meals to millions of hungry people pic.twitter.com/jn64M0GDim
— Jacqueline Fernandez (@Asli_Jacqueline) May 6, 2021