நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் நாட்டு நடப்பு, அரசியல் குறித்த பல விசயங்களை தொடர்ந்து பேசி வருபவர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்டு பேசினார்.
டிவிட்டர்களில் அவரை அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் தரக்குறைவாக விமர்சித்த போதும் தைரியமாக அவர்களுக்கு சாட்டையடி கொடுத்துள்ளார்.
பெண் கொடுமைகள் குறித்தும் பேசி வருகிறார். கடந்த 2012 ல் நாட்டில் அத்தனை பேரையும் பதற வைத்த சம்பவம் டில்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் தான்.
நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனை நேற்று அவர்களுக்கு விதிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் ஒருவர் மைனர் என்பதால் 3 வருட சிறை தண்டனையுடன் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி நிர்பயா வழக்கில் 4 விலங்குகள் தூக்கில் தொடங்விடப்பட்டன. ஒருவன் சட்டத்தின் ஓட்டை வழியே தப்பித்து விட்டான், அவன் பேருந்தில் மாட்டியோ அல்லது கொரோனா வைரஸ் தாக்கியோ சாகணும் என பதிவிட்டுள்ளார்.
#NirbhayaVerdict At last, All four animals in the #NirbhayaCase have been hanged. One got away under the 'juvenile' loophole. Hope he catches coronavirus or dies under a bus.
— Kasturi Shankar (@KasthuriShankar) March 20, 2020

