தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்த நிலையில் இது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லலாம்.
இந்த நிலையில் ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் இடம் கூலி படம் குறித்த கேள்வி கேட்டுள்ளனர் அதற்கு பதில் அளித்த சௌந்தர்யா நான் என் அப்பாவின் ரசிகை அந்த படத்தில் அவரது டி ஏஜிங் காட்சிகளைப் பார்த்து ரசித்தேன் எனக் கூறியுள்ளார் எனக்கு படம் பிடித்ததா என்று கேட்டால் நான் ஆமாம் என்று தான் சொல்வேன் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அவரின் சிறந்த படங்களில் ஒன்றா எனக் கேட்டால் இல்லை என்று சொல்வேன் என வெளிப்படையாக பேசியிருக்கிறார் இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.சௌந்தர்யா ரஜினிகாந்த் தற்போது வித் லவ் என்ற படத்தை தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.


